|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க விருப்பமில்லை என நீதிபதிகள் விலகல்!

கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.   அம்மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.   இம்மனு மீதான விசாரணை நடந்துக்கொண்டிருக்கின்றனது.

இந்நிலையில் கனிமொழியையும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று எதிர்ப்பு தெரிவித்தது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகியோர் 2ஜி விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...