|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

கிறிஸ் கெய்ல் எதிர்காலம்... ? Will Chris Gayle move away from Windies cricket?

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவரை மீண்டும் அணியில் சேர்ப்பது தொடர்பாக நடந்த சமரச பேச்சுவார்த்தை மோதலில் முடிந்தது. இதனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இவர் இடம் பெற வாய்ப்பு இல்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் (டபிள்யு.ஐ.பி.ஏ.,) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும்(டபிள்யு.ஐ.சி.பி.,) இடையே சம்பள ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால் வீரர்கள் ஒப்பந்தத்தில், அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் கையெழுத்திடவில்லை. ஒருவேளை தனது ஐ.பி.எல்., சம்பளத்துக்கு சமமான தொகையை, போர்டு கொடுத்தால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று கெய்ல் தெரிவித்தார்.
 

காரணம் என்ன? இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கெய்ல் நீக்கப்பட்டு, டேரன் சமி நியமிக்கப்பட்டார். உலக கோப்பை தொடருக்குப் பின் கெய்லுக்கு காயம் இருப்பதாக கூறி, சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், அணியில் சேர்க்காமல் புறக்கணித்தது. இதனால் வெறுப்படைந்த கெய்ல், ஒரு "ரேடியோ இன்டர்வியூவில்' கூறுகையில்,""அனைத்து சிக்கலுக்கும் பயிற்சியாளர் கிப்சன் தான் காரணம். சர்வான் உள்ளிட்ட வீரர்கள், நெருக்கடியுடன் தான் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் தொடருக்கான பயிற்சி முகாமில் வீரர்கள் அழைக்கப்பட்ட போது, எனக்கு கிரிக்கெட் போர்டு தரப்பில் இருந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. "மீடியா' மூலம் தான் தெரிந்து கொண்டேன். இதனால் வேறுவழியில்லாமல் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க நேர்ந்தது,'' என்றார்.
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. இதனால் ஐ.பி.எல்., தொடரில் 2 சதங்கள் உட்பட 608 ரன்கள் எடுத்த போதும், இந்தியாவுக்கு எதிரான "டுவென்டி-20', ஒருநாள் போட்டித் தொடரில் கெய்ல் சேர்க்கப்பட வில்லை. இந்தியாவுடன், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்த போதும், அடுத்து வரும் டெஸ்ட் தொடரிலும், கெய்லை ஓரங்கட்ட, டபிள்யு.ஐ.சி.பி., முடிவு செய்தது.சமாதான முயற்சி: கெய்லை அணியில் சேர்க்க, டபிள்யு.ஐ.பி.ஏ., சார்பில் சமாதான முயற்சி நடந்தது. இதன் ஒருபகுதியாக கெய்ல், டபிள்யு.ஐ.பி.ஏ., தலைவர் ராம்நரைன், துணைத்தலைவர் வேவல் ஹிண்ட்ஸ், டபிள்யு.ஐ.சி.பி., தலைமை அதிகாரி எர்னஸ்ட், அணியின் பயிற்சியாளர் கிப்சன் உட்பட பலர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
 

கடும் விவாதம்:இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. போர்டு குறித்து தெரிவித்த கருத்துக்களை, கெய்ல் வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை ஏற்க முடியாது என, உறுதியாக தெரிவித்துள்ளார் கெய்ல். சுமார் நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தின் முடிவில், தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மிகவும் வெறுப்படைந்த வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன், ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி எர்னஸ்ட்டை, அடிக்க பாய்ந்தாராம். பின் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கெய்ல் இல்லை: இச்சம்பவம் குறித்து கெய்ல், கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் இந்தியாவுக்கு எதிராக வரும் ஜூன் 20 ல் துவங்கும் டெஸ்ட் தொடரில், கெய்ல் இடம் பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
தவிர, தொடர்ந்து எதிராகவே செயல்பட்டு வரும் கெய்லுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடைவிதிக்கும் முடிவையும் டபிள்யு.ஐ.சி.பி., எடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் கெய்லில் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டத்தில் நாற்காலி வீச்சு சமரச கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீச முயற்சித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் போர்டு உறுப்பினர்கள் கூறுகையில்,"வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை தூக்கி, தலைமை அதிகாரி எர்னஸ்டை அடிக்க பாய்ந்தார்,' என்கின்றனர். இதை மறுத்து வீரர்கள் சங்கத்தினர்,"கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது உண்மைதான். இதனால் கோபத்தில் தனது நாற்காலியை விட்டு, ராம்நரைன் எழுந்து சென்றுவிட்டார். மற்றபடி, அதிகாரியை அடிக்க பாய்ந்தார் என்ற செய்தியில் உண்மையில்லை,' என, தெரிவித்தனர்.
 

எல்லாம் முடிந்து விட்டது  கெயல் பிரச்னை குறித்து டபிள்யு.ஐ.சி.பி., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கெய்ல் தெரிவித்த கருத்து காரணமாக, கிரிக்கெட் போர்டு, நிர்வாகிகள், பயிற்சியாளர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கே அவமானம் ஏற்பட்டது. இதை வாபஸ் பெற்றால், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தோம். கெய்ல் மறுக்கவே, கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் கெய்ல் மீண்டும் விளையாடுவார் என்று இருந்த, சிறிய நம்பிக்கையும் தகர்ந்து விட்டது,'' என்றார்.

ரிச்சர்ட்ஸ் கண்டனம் வீரர்கள் சங்கம் மற்றும் கிரிக்கெட் போர்டு பிரச்னை குறித்து முன்னாள் வீரர் ரிச்சர்ட்ஸ் கூறுகையில்,"" நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்னையால், பாதிக்கப்படுவது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தான். எதிர்கால நலன் கருதி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, இருதரப்பிலும் இருந்தும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், அனைவருக்கும் வீழ்ச்சி தான் கிடைக்கும்,'' என்றார்.


Chris wаntѕ tο play cricket fοr thе West Indies. Hе wаntѕ tο play really tеrrіbƖу аnԁ thіѕ іѕ whу hе turned up fοr thе meeting. Bυt, whаt wаѕ ѕаіԁ аnԁ hοw іt wаѕ ѕаіԁ аt thе meeting hаѕ left hіm rаthеr frustrated аnԁ hе mау now look аt taking hіѕ game away frοm thе West Indies," thе newspaper quoted a source аѕ saying."Thіѕ іѕ a man whο hаѕ served West Indies cricket well іn thе past аnԁ hе wаѕ аƖѕο captain οf thе regional team. Bυt, hе wаѕ treated very tеrrіbƖу bу one individual аt thе meeting аnԁ thіѕ hаѕ left hіm іn a state," thе source added. Gayle wаѕ accompanied bу Executive President οf thе West Indies Players' Association Dinanath Ramnarine аnԁ WIPA Vice-President Wavell Hinds іn thе a near four-hour long meeting wіth thе WICB οn Saturday. "Chris wаѕ penalised (bу being dropped frοm thе West Indies team) previous tο hе wаѕ agreed a hearing. Thіѕ wаѕ реrfесtƖу unfair аnԁ wаѕ aired аt thе meeting.


"AƖѕο one official whο represented thе WICB wаѕ very provocative towards Chris аnԁ wаѕ nοt even allowing hіm tο аnѕwеr qυеѕtіοnѕ posed tο hіm. Thіѕ wаѕ very unfortunate," thе source exposed.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...