|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

கும்மிடிப்பூண்டி சந்திரசேகரேந்திரர் கோவிலில் ரகசிய அறை !


புது கும்மிடிப்பூண்டி சந்திரசேகரேந்திரர் கோவிலில் ரகசிய அறை உள்ளது. இதில் பழங்காலப் புதையல்கள் ஏராளம் இருக்கும் என்று நம்பப்பட்டது.  இந்தக் கோயிலின் ரகசிய அறையைத் திறந்து பார்க்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் பல இருந்ததாக வந்த தகவலை அடுத்து இந்தக் கோயிலிலும் அப்படி ஏதாவது இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதனால், இன்று காலை அதிகாரிகள் முன்னிலையில் இந்தக் கோயிலின் ரகசிய அறை திறக்கப்பட்டது. ஆனால், அந்த அறையில் பொக்கிஷங்கள், புதையல் என எதுவும் இல்லை.  கற்களும், மண்ணும் மட்டுமே இருந்தன.   இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...