|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி ...!

விழுப்புரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  ஜனகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகம் தற்பொது மின்நுகர்வோர் நலன் கருதி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மின் நுகர்வோர் கள் விருப்பப்பட்டால் மின் கட்டண தொகையை முன்கூட்டியே செலுத்த லாம். அவ்வாறு செலுத் தும் வைப்புத்தொகை மின்நுகர்வோரது மின்கட்டண அட்டையில் குறித்து தரப்படும்.  மேலும் அந்த வைப்புத்தொகைக்கு ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி வீதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வைப்பு தொகையுடன் நுகர்வோரது கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.  மின் நுகர்வோர் இருமாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படும் மின் கட்டணத்தொகையை அந்த வைப்புத் தொகையிலிருந்து கழித்து கொள்ளப்படும்.  இந்த திட்டத்தினால் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த ஒவ்வொரு தடவையும் அலுவலகத்தை நாடிவரும் சிரமத்தையும், காலவிரத்தையும் தவிர்த்துக்கொள்ளலாம். எனவே அனைவரும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...