|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

முதல்வர் ஜெ., இலங்கைக்கு வரட்டும்!


மாலத்தீவில் சார்க் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ., இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக்கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற்கிறோம் என்றார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில்; புலிகள் மற்றும் இவரது ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மேலும் ஒரு போருக்கு தயாராக இருப்பதாகவும் இது குறித்து எங்களிடம் சரண் அடைந்துள்ள புலிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்‌களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் கண்காணித்து தான் வருகிறோம். தமிழர்கள் குடியமர்த்துதல் தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வந்து பார்த்து கொள்ளலாம். ஜெ., வை வரவேற்பீர்களா என்று கேட்டதற்கு தாரளமாக அவர் வரட்டும். அவரை வரவேற்கிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை அவரை நேரில் தெரிந்து கொள்ளட்டும் என்றார். இலங்கை சீனா உறவின் காரணமாக இந்திய உறவில் பாதிப்பு வருமா என்று கேட்டபோது இந்தியா எங்களின் தொப்புள் கொடி உறவு என்றார். இந்தியா எங்களுடைய உறவினர், சீனா எங்களுடைய நண்பர் இவ்வாறு கூறி முடித்து கொண்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...