|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

சி எஸ் அமுதன் இயக்கும் 'ரெண்டாவது படம்!

தமிழ்ப் படம் இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கும் அடுத்த படத்துக்கு 'ரெண்டாவது படம்' என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்த படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது 'தமிழ் படம்'. மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். 'க்ளவுட் நைன்' நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினி, கமல், பாக்யராஜா என ஒருவரை விடாமல் கிண்டலடித்த இந்தப் படம் ஓஹோவென ஓடியது.

இந்த நிலையில் இவரது இரண்டாவது படத்துக்கு தலவலி என்று பெயரிட்டிருப்பதாகவும், இதில் அஜீத், விஜய்யை கிண்டலடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது தனது இரண்டாவது படத்துக்கு 'ரெண்டாவது படம்' என்றே பெயரிட்டுள்ளனர்.

இதில் விமல், அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை படத்தின் பிஆர்ஓ மவுனம் ரவி இன்று வெளியிட்டுள்ளார். ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கண்ணன் இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரும் இந்தப் படம் விஞ்ஞானமும் சரித்திரமும் இணைந்த காதல் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...