|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

சீனாவில் கடலின் மீது 30 கி.மீட்டருக்கு பாலம்.

சீனாவில், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில், கடல் மீது, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளில், சீனா மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடல் மீது, 36 கிலோ மீட்டர் பாலம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், 29.6 கிலோ மீட்டர் நீளத்துக்கு, பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டுள்ளன. 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பாலம், வரும் 2016ல் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கடல் அடியில் சுரங்கமும் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...