|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

அரசு நல விடுதிகளில் இலங்கை அகதிகள் தங்கிப் படிக்க உத்தரவு!


தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், இலங்கை அகதிகளின் குழந்தைகள் தங்கிப் படிக்க அனுமதித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும், 21 ஆயிரம் இலங்கை அகதிகளின் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வர சிரமப்படுவதை அறிந்த முதல்வர், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும், அனைத்து மாணவர், மாணவியர் விடுதிகளிலும் தங்கி, கல்வி பயில உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தமிழகத்தில், தற்போதுள்ள 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாணவர், மாணவியர் விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும், தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக, ஐந்து இடங்கள் வீதம், மொத்தம் 6,470 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு 3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.இதேபோல, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும், 1,238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும், ஐந்து இடங்கள் வீதம், 6,190 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.முதல்வரின் இந்த நடவடிக்கை மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின், 12 ஆயிரத்து 660 குழந்தைகள், விடுதிகளில் தங்கிப் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...