|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2011

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை...


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க என்.இ.இ.டி. எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று சுகாதாரத் துறை அதிகாரி கூறியுள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து நாடு முழுமைக்கும்  மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரும் கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு கிடையாது என்று அதிகாரி தெரிவித்தார். 2012ம் கல்வியாண்டு முதல் இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர தேசிய தகுதி காண் பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. ஆனால் இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழகத்தில் மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, இடைக்காலத் தடை பெற்றுள்ளது.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், இந்திய பிரமர் மன்மோகன் சிங்கிற்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதியுள்ளார். இதேப்போன்று பொதுத் தேர்வுக்கு தடை பெற்றுள்ள ஆந்திர மாநிலத்தில், தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. எனவே, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...