|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

வருமானம் சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுப்பு!

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ)சட்டத்தின் மூலம், தன்னுடைய வருமான வரி தாக்கல் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் வி. கோபால கிருஷ்ணன் டெல்லி வருமான வரி உதவி கமிஷனருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000 2001 மற்றும் 2010 2011 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த படிவங்களை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 11 ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், தனிப்பட்ட சுதந்திரம், பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று கூறி சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுத்து விட்டார். தன்னுடைய விபரங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் வழங்க இயலாது என்று சோனியா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...