|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

நீங்கள் பேசுவதை கவனித்த உங்கள் குழந்தை பேசுகிறது!

எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகத்தான் பிறக்கின்றனர். சமுதாயத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெற்றோர்களுக்கு பங்குண்டு ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்வதே பெற்றோர்களைப் பார்த்துதான். எனவே குழந்தைகளுக்கு ரோல்மாடலாக திகழவேண்டிய பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

தேவையற்ற விமர்சனம் நம்முடைய நண்பர்களுக்கு நாம் செல்லப்பெயர் வைத்திருக்கலாம். அந்தப்பெயரை குழந்தைகள் முன்னிலையில் சொல்லி விமர்சிப்பது தவறான பழக்கம். ‘முட்டைக்கண்ணன்’ என்று பெயர் வைத்திருந்தால் அதை கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும் குழந்தைகள், அடுத்தநாள் நண்பர் வரும்போது முட்டைக்கண்ணன் அங்கிள் வந்திட்டார் என்று கூற வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கை. அதேபோல் அவர்கள் டீச்சரைப் பற்றி குழந்தைகளிடம் கமென்ட் அடிக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

சண்டை வேண்டாம் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடவேண்டும். அது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும். கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. எனவே அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தீயவை பேசாதீர்கள் சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அதேபோல் குழந்தைகள் முன்னிலையில் தீய சொற்களை பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொய் சொல்லாதீர்கள் சில பெண்மணிகள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். அது குழந்தைகளுக்கு தெரிந்து விட்டால் "அப்பாகிட்டே சொல்லாதே என்று கூறுவர். இது தவறான பழக்கமாகும். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் குழந்தை "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று ப்ளாக்மெயில் செய்ய வாய்ப்புள்ளது.

கமிஷன் பழக்கம் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

முன் உதாரணம் குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை குழந்தை முன்னிலையில் மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஒப்பீடு வேண்டாமே படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது. அதேபோல் உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...