|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

நூறு ஆண்டுகளில் இந்தியர் யாரும் நோபல் பரிசு பெறவில்லை!




சி.பி.எஸ்.இ., சேர்மன் வினித் ஜோஷி உலகளவில் இந்தியாவில் அதிக மாணவர்கள், கல்லூரி செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் உள்ளனர். அதனால், 2020, 2030ம் ஆண்டிற்குள் இந்தியா இளைஞர்கள் நாடாக காணப்படும். இந்தியாவில் படித்த இளைஞர்கள், அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பா நாடுகளிலும் இன்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் சிறந்து விளங்குன்றனர். இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நிரந்தர வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். பத்து ஆண்டில் தற்போதைய இந்திய கல்வி முறை நிறைய மாற்றம் கண்டுள்ளது. மாணவர்களுடைய அறிவையும், தனித்திறமைகளையும் மேம்படுத்தக்கூடிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெற்றோர், குழந்தைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும், அவர்களுடைய எதிர்காலம் சிறக்க தங்களுடைய பங்களிப்பையும், ஊக்கத்தையும் வழங்க வேண்டும்.

கடந்த நூறு ஆண்டில் இந்தியர்கள் யாரும் நோபல் பரிசு பெறவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் தான் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த குறையை போக்க தற்போதைய மாணவர்கள், சிறப்பாக படித்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அதற்கு பள்ளிகளும், பெற்றோரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்கி, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும். தற்போதைய போட்டி நிறைந்த உலகில், மாணவர்கள், படிப்பில் சிறந்த திறமைகளையும், முயற்சியையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...