|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

சேலத்தில் ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து ஒருவரை மணந்த பெண்! - கலிகாலம்!!

ஒரே சமயத்தில் 2 பேரைக் காதலித்து வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண நாளன்று ஒரு காதலரை ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திடீரென திருமணம் செய்துகொண்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறி்த்த விவரம்: சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கும்போதே வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் காதலித்து வந்தார். இந்த நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து அவர்கள் வசந்தபிரியாவை திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வசந்தப்பிரியா தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். அதிகாலையில் திடீரென மணப்பெண் மாயமானார்.  இதனால் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.



அங்கிருந்து மாயமான வசந்தபிரியா தனது இன்னொரு காதலனான ரமேஷை பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தம்பதி சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார் வசந்தபிரியா குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அந்த 2 குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...