|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

இந்தியா செல்வதை தவிர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகள் எச்சரிக்கை!


இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்து பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. பண்டிகை சீசனில் மக்கள் கூடும் இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சி செய்யக்கூடும் என்று உலகின் பல்வேறு நாட்டு உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன.
 
இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு சென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த எச்சரிக்கை குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இணையத் தளங்களில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 5 நாடுகளின் எச்சரிக்கை அறிவிப்பால் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. பலர் தங்கள் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டனர். இது மத்திய சுற்றுலா துறையை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. இந்தியா பற்றி தேவை இல்லாமல் அச்ச உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு துறை மூலம் 5 நாடுகளுக்கும் தெரிவிக்க சுற்றுலா துறை கோரிக்கை விடுத்துள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...