|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

கணவன் திருந்தாததால் வெட்டிக்கொன்றேன் மனைவி ஹேமலதா வாக்குமூலம்!

ஒசூர் ராயக்கோட்டை ஹட்கோ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (38). பெயிண்டர். இவரது மனைவி ஹேமலதா (35). இவர்களுக்கு திருமணமாகி 14 வருடமாகிறது. கிருஷ்ணபிரசாத்துக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதுபோல நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹேமலதா கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்த தகவலறிந்த ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமதாவை கைது செய்தனர். 


விசாரணையில் ஹேமலதா பரபரப்பு தகவலை தெரிவித்தார். திருமணம் ஆன நாள் முதல் குடித்து விட்டு கொடுமை செய்துள்ளார். போதையில் அடித்து, உதைப்பது, ஆபாசமாக பேசி திட்டி வந்துள்ளார். எவ்வளவே கண்டித்தும் கணவர் திருந்தவில்லை.எச்சரிக்கை விடுத்தும் திருந்தவில்லை. பொருத்து பொருத்து பார்த்தும் திருந்தததால் கணவனை வெட்டிக் கொலை செய்ததாக ஹேமலதா வாக்குமூலம் அளித்துள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...