|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

கனிமொழி ஜாமீன் குறித்து கருணாநிதி...

கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி அப்பாடா... வந்தியா? என்று கேட்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் 


வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை:
செய்தியாளர் :- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
கருணாநிதி பதில் :- மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி :- அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் :- அப்பாடா! வந்தியா?
கேள்வி :- நீங்கள் இப்போது டெல்லி செல்கிறீர்களா?
பதில் :- இல்லை.
கேள்வி :- கனி இன்றைக்கே சென்னை வருகிறார்களா? எப்போது வருகிறார்கள்?
பதில் :- இன்னும் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வர வேண்டும்.
கேள்வி :- இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில் :- ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.
கேள்வி :- சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா?
பதில் :- “அப்பா” என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்” என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.
கேள்வி :- சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா?
பதில் :- எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.
கேள்வி :- தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா?
பதில் :- நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல!
கேள்வி :- தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா?
பதில் :- அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.
கேள்வி :- கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே?
பதில் :- என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
கேள்வி :- கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா? பலமாக இருக்குமா? ஏற்பாடு செய்யப்படுமா?
பதில் :- வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெரிதாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேள்வி :- கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?
பதில் :- அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...