|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

கலிகாலம் 2 பெண் குழந்தைகளின் தாய் ஆட்டோ டிரைவருடன் மாயம்!

நாகர்கோவில்: நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.   இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். லதா தூத்துரில் அழகு கலை நிலையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலையில் குழந்தைகளை ஒரு ஆட்டோவில் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு மீண்டும் அதே ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து லதாவின் தாயார் சரஸ்வதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் லதாவுக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தேடிச் சென்றனர். ஆனால் அவரையும் காணவில்லை. இதனால் லதாவும், ஆட்டோ டிரைவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...