|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

இது பெண்கள் தின ஸ்பெசல் இங்கல்ல பஞ்சாபில் பெண்களுக்கு எம்.ஏ. வரை இலவச கல்வி!

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. வரும் 14-ம் தேதி நடக்க இருக்கும்  பதவியேற்பு விழாவில் பிரகாஷ் சிங் பாதல் 5-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 85 வயதான பாதல் ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த முறை பாதல் ஆட்சிக்கு வந்தபோது பஞ்சாபில் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்பட்டது.  இம்முறை பதவியேற்பதற்கு முன்பே பஞ்சாபில் அனைத்து பெண்களுக்கும் எம்.ஏ. வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாதல் அறிவித்துள்ளார்.  மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கும் இனி இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் பாதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...