|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2012

மார்ச் 5 இலங்கைத்தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மா.கம்யூ ஜி.ராமகிருஷ்ணன்.


இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில்  பல்லாயிரம் பேர் இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும், பலத்த காயமுற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதும் உள்ளிட்ட  மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. 

எனவே, இலங்கையில் ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேசத்தரத்திலான, சுயேச்சையான விசாரணை காலதாமதமின்றி நடத்தப்படவும், போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க  கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கை தொடர்வதை உறுதிப்படுத்திடவும், இலங்கைத்தமிழர்களுக்கு சம அந்தளிது, சம உரிமை உள்ளிட்ட சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை ஏற்படுத்திடவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திடவும் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

மேற்கண்டவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்தி மார்ச் 5 அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத்தூதரகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கட்சி அணிகளும், ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க மார்க்சிளிட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...