|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

மோடியின் பெயர் 5வது மேஷபிள் விருது 2011க்கு பரிந்துரை!


சமூக இணையதளங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள் பிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் 5வது மேஷபிள் விருது 2011க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர் அல்லாத ஒரே நபர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தினமும் தான் என்ன செய்கிறோம் என்பதை டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் தெரிவிக்கும் பழக்கம் உள்ளவர். இது தவிர தனது கருத்துகளை தன்னுடைய பிளாக்கில் தவறாமல் பதிவு செய்துவிடுவார். குஜராத் அரசு மற்றும் பாஜகவின் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிப்பவர்.

டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், கூகுள்+ மற்றும் பிற சமூக இணையதளங்களை சிறப்பாக பயன்படுத்தும் நிறுவனங்கள், நபர்கள் மற்றும் திட்டங்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் மேஷபிள் விருது வழங்கப்படுகிறது. சிறந்த புதிய கேட்ஜெட், சிறந்த சமூக வளைதளம், சமூக இணைதளங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிராண்ட உள்ளிட்ட 28 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அரசியல்வலாதிகளுக்கான விருதுப் பிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கோரி ப்ரூக்கர், ரான் பால், பட்டி ரோமர் மற்றும் பெர்னி சான்டர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக நீங்கள் யாருக்காவது வாக்களிக்க விரும்பினால் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதிக்குள் வாக்கை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். வெற்றியாளர்கள் வரும் டிசம்பர் 19ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...