|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து!

 இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பேருந்து ஏற வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் ஏழு சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பேருந்தினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சென்னையில்தான் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...