|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

சினேகன் தொடர்பான வழக்கில் குழந்தை தந்தையிடமே இருக்கட்டும் நீதிபதி!


சினேகனுடன் தொடர்பு வைத்துள்ள தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைக்காமல், தன்னுடன் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மடிப்பாக்கம் எஞ்ஜினியர் பிரபாகரன் மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மனுவை விசாரித்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தந்தை பிரபாகரனுடனே குழந்தை வசிக்கலாம் என தெரிவித்தார். மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், என் மனைவி ஜமுனா கலாதேவிக்கும் நடிகர் சினேகனுக்கும் தொடர்பு உள்ளது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார். எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.எங்களுக்குப் பிறந்த 5 வயது பெண் குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். தொடர்ந்து அப்பாவுடன் இருப்பதாக கூறினாள். இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...