|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

சிறுத்தையின் சிறு முகம்!


தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ள கார்த்தி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்த்தியிடம், 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?' என கேள்வி கேட்டார் விழாவைத் தொகுத்தளித்த பெண்.

அதற்கு கார்த்தி, "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை," என்று பதில் சொல்வது போல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று ஒரு கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி கூறுகையில், "தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள். 

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...