|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

தலாய்லாமா பங்கேற்கும் டில்லி நிகழ்ச்சியால் சீனாவுக்கு அதிருப்தி!


புத்த மத துறவியான தலாய்லாமா இந்தியாவில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசவிருக்கிறார் என்ற விஷயத்தினால் அதிருப்தி அடைந்த சீனா இந்தியாவுடன் நடத்தவிருந்த முக்கிய பேச்சில் பங்கேற்காமல் தள்ளி போட்டுள்ளது. திபெத்தில் வாழும் புத்த பிட்சுகள் தனி உரிமைக்காக போராடி வரும் தலாய்லாமா என்றாலே சீனாவுக்கு எப்போதும் கடும் வெறுப்பாகத்தான் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கிறார் என்றதும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து புத்த துறவிகள் பங்கேற்கும் 4 நாள் விழா டில்லியில் வரும் புதன்கிழமை துவங்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வெளியுறவு துறை அமைச்சகமும் இணைந்து நடந்துகிறது. 

இந்த நிகழ்ச்சி குறித்து அதிருப்தி அடைந்த சீனா தனது குமுறலை தெரிவிக்கும் விதமாக இருநாடுகள் மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு தடை பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் பெய்ஜீங்கில் அந்நாட்டு <உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடத்தினார். இதனையடுத்து 15ம் கட்ட பேச்ச வார்த்தை நாளை ( திங்கட்கிழமை ) நடப்பதாக இருந்தது. ஆனால் எவ்வித காரணம் தெரிவிக்காமல் இந்த பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய - சீன தரப்பில் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் இன்னும் எதிர்காலத்தில் இருதரப்பினருக்கும் வசதியாக ஒரு நாள் நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...