|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!


 பாக் ஜலசந்தி பகுதியில் 3 மீன்பிடிப் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயமடைந்தார். படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக மீன்வளத் துறையினர் தெரிவித்தனர். இதில் ஒரு மீனவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.கடந்த 9 நாட்களில் இருவேறு சம்பவங்களில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு 14 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். 23 படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நவம்பர் 7-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சோகம் விடியல் எப்போது ? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...