|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

சிவகாசி பகுதியில் நிலத்தின் மதிப்பீடு 50 சதவீதம் உயர்வு!


சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சிவகாசி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நில வழிகாட்டி மதிப்பீடு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்போது வெளியிட்டுள்ளனர். சிவகாசி நகராட்சி தொழில் நகரம் என்பதால், இங்கு நன்செய், புன்செய் நிலங்கள் எதுவும் இல்லை. குடியிருப்பு பகுதிகள் அதிகமாகியுள்ளன. குடியிருப்பு பகுதியில் ஒரு சதுர அடியில் மதிப்பிடப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி குடியிப்பு பகுதி தரம் 1ஆக ஆறுமுகம் ரோடு, சேர்மன் பி.எஸ்.ஆர்., நகர், வேலாயுதம் ரஸ்தா ரோடு உள்ளிட்ட 135 தெருக்களில், கடந்த வழிகாட்டி மதிப்பீட்டில் ஒரு சதுர அடி ரூ.750 ஆக இருந்தது. தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. நகராட்சி குடியிருப்பு பகுதி தரம் 2க்கு உட்பட்ட சேர்மன் ஏ.எஸ்.கே. தங்கையா நாடார் ரோடு பகுதி வழிகாட்டி மதிப்பீடு, முன்பு ரூ.550 ஆக இருந்த சதுர அடி ,தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. குடியிருப்பு பகுதி 3வது தரத்திற்கு உட்பட்ட பகுதியான சேர்மன் அருணாசலம் ரோடு பகுதி முன்பு ரூ.500 ஆக இருந்தது.

தற்போது ரூ.650 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு வணிக பகுதியில் ஒரு சதுர அடி ரூ.1600, ரூ.1350, ரூ.950 எனவும், தொழிற்பேட்டை பகுதி ஒரு சதுர அடி ரூ.850 என வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவகாசியை ஒட்டியுள்ள விஸ்வநத்தம் பகுதியில் புஞ்சை கிணற்று பாசன நிலம் ஒரு ஏக்கர் ரூ.10 லட்சமாகவும், இதர சாலைகள் ஒட்டிய நிலமாக இருந்தால் ஒரு ஏக்கர் ரூ.15லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுப்பங்குளத்தில் புஞ்சை கிணற்று பாசனம் ஒரு ஏக்கர் ரூ.4.50 லட்சம், புஞ்சை மானாவாரி நிலம் ஒரு ஏக்கர் ரூ.3.50 லட்சம், இதர சாலைகள் ஒட்டிய நிலமாக இருந்தால் ஏக்கர் ரூ.12 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஆனையூரில் புஞ்சை மானாவாரி நிலம் ஒரு ஏக்கர் ரூ.7 லட்சமாகவும், ரயில்பாதை மற்றும் இதர சாலைகளை ஒட்டிய நிலங்கள் ஒரு ஏக்கர் ரூ.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு மதிப்பீடு பொதுமக்கள் பார்வைக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...