|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

மூன்று வீரர்களுடன் பூமிக்கு திரும்பியது சோயூஸ்!

விண்வெளியில் ஐந்து மாத காலம் தங்கியிருந்த ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய விண்வெளி வீரர்கள், சோயூஸ் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல, நாடுகளின் ஒத்துழைப்புடன் விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், பல மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு தேவையான தண்ணீர், பிராணவாயு, உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை, அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் சுமந்து செல்கின்றன.விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த, அமெரிக்காவின் மைக் போசம், ஜப்பானின் சதோஷி புருகவா, ரஷ்யாவின் செர்ஜி வோல்கோவ் ஆகியோர், சோயூஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பினர்.கஜகஸ்தானில் உள்ள அர்கல்யங்க் என்ற இடத்தில், தரையிறங்கிய சோயூஸ் விண்கலத்திலிருந்து, மூன்று நாட்டு வீரர்களும் வெளியே வந்தனர். கஜகஸ்தானில், அவர்கள் தரையிறங்கிய இடத்தில் மைனஸ், 15 டிகிரி குளிர் காணப்பட்டது. நல்ல உடல் நிலையில் இருந்த, அவர்கள் சம்பிரதாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...