|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

கள்ளக்காதலனை கொன்ற பெண் கணவருடன் கைது கலிகாலம்!


மதுராந்தகம் அருகே உள்ள உத்திரமேரூரைச் சேர்ந்தவர் தினதயாளன். இவருக்கு வயது 23. இவர் கடந்த 19ஆம் தேதி விசூர் ஏரியில் பிணமாக கிடந்தார். பெருநகர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். 


பிரேத பரிசோதனையில் அவர் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டது தெரிய வந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் கள்ளக் காதல் விவகாரத்தில் தீன தயாளன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தீனதயாளனுக்கு அதே ஊரைச் சேர்ந்த அம்மு என்கிற அந்தோணியம்மாளுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்தது. அம்முவுக்கு திருமணம் ஆன பிறகும் இவர்களது கள்ளத் தொடர்வு நீடித்தது. 

சம்பவத்தன்று தீனதயாளன் அம்மு வீட்டுக்கு சென்று அம்முவிடம் உல்லாசமாக இருந்தார். இதனை அம்முவின் கணவர் ஜான் நேரில் பார்த்துவிட்டார். இதனை உணர்ந்த அம்மு தான் உத்தமி என்றம் தீனதயாளன்தான் தகாத முறையில் நடந்து கொண்டான் என்றும் நாடகமாடினார். ஆத்திரம் அடைந்த ஜான் மனைவியுடன் சேர்த்து தீனதயாளனை தாக்கினார். மேலும் தீனதயாளனை ஜான் பிடித்துக்கொள்ள அம்மு துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். 

தீனதயாளன் பிணமாக சாய்ந்ததும் அம்முவின் சகோதரர் ரூபன், சூசைராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீனதயாளன் பிணத்தை மோட்டார் சைக்கிளில் தூக்கி வந்து ஏரிக்கரையில் வீசி விட்டு தப்பிவிட்டனர். டிஎஸ்பி ராஜ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பொன் ஜெயராமன் விசாரித்து அம்மு, அவரது கணவர் ஜான், சகோதரர்கள் ரூபன், சூசைராஜ், ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...