|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்க புதிய கட்டுப்பாடுகள்!


தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் (பிளாகார்டு) வைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் எஸ்.கருத்தையா பாண்டியன் வெளியிட்டுள்ள அரசாணையில்,   ‘’ டிஜிட்டல் பேனர், விளம்பர தட்டி வைக்க விரும்புபவர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் ஒரு பேனர் அல்லது விளம்பரத் தட்டி வைக்க ரூ.200 செலுத்த வேண்டும். நகராட்சி பகுதியில் ரூ.100-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.50-ம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் கடந்த 16-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன’

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...