|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

பாலமுரளி கிருஷ்ணாவுக்கு பி.ஓபுல் ரெட்டி விருது!


ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழசவை ஒட்டி சென்னை பாரதிய வித்யா பவனில் கலாச்சார விழா- 2011 நடைபெற்றது. இதில் பிரபலமான முன்னள் மற்றும் இந்நாள் கலைஞர்கள் கவுரவிககப்பட்டனர். பாலமுரளி கிருஷ்ணாவுக்கு பி.ஓபுல் ரெட்டி விருது வழங்கப்பட்டது. விரதை ஏற்று பாலமுரளி கிருஷ்ணா பேசுகையில், கலைகள் மற்றும் கலைஞர்களின் தாய்வீடாக திகழ்வது பாரதிய வித்யா பவன். கலைக்கும் கலாச்சாரத்தற்கும் இந்த அமைப்பு ஆற்றி வரும் பணி மகத்தானது. இந்த பணி தொடர வேண்டும் என்றார்.விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறவன மேலாண் இயக்குநர் ஜி.ஸ்ரீநிவாசன் பேசுகையில், இசை விழாவின்போது சென்னை வித்தியாசமான நகராக மாறி விடுகிறது. பாரதிய வித்யா பவனில் நடைபெறும் கலாச்சார விழா தரம் வாய்ந்ததாக உள்ளது. சிறந்த தரமான கலைஞர்களையும் ரசிகர்களையும் சந்திக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது. இந்த பாரதிய வித்யா பவனை உருவாக்கிய கே.எம்.முன்ஷி கூறியதைப் போல, இந்த அமைப்பு கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் நம்பிøக் வைத்து அறிவு பூர்வ கலாச்சார இயக்கத்தின் முன்னோடியாக திகழ்கிறது. ஒழுக்கச் சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ள உலகை எதிர்நோக்கியுள்ள சவால்களைச் சமாளிக்கும் தகுதியான அமைப்பாக இது விளங்குகிறது என்றார். 
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், மூத்தவர்களின் நலனில் அக்கறை கொண்டு, மூத்த கலைஞர்களுக்கு, எதிர்காலம் இஞைர்கள் கையில் என்பதை நிரூபிக்கும் வøயில் இறைய கலைஞர்களுக்கும் இங்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில், பி.ஞானாம்பாள் நினைவு விருதை கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவனுக்கு, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டியின் மனைவி சுசாரிதா ரெட்டி வழங்கினார்.  பாரூர் எம்.எஸ். அன்நதராமன், செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, சுகுணா வரதாச்சாரி, பிரபஞ்சம் சீதாராம், ஜி.அபிலேஷ் ஆகியோருக்கும் கலாச்சார விருதுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...