|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

அய்யப்ப பக்தர்களுக்கு, கேரள போலீசார், "சுக்கு காபி'

மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக இரவு நேரத்தில் சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, கேரள போலீசார், "சுக்கு காபி' வழங்கி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கண் விழித்து வாகனங்களில் வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்கும் நோக்கில் கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பக்தர்களுக்கு போலீசார் அடிமாலி அருகில் உள்ள சீயப்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில், "சுக்கு காபி' வழங்கி வருகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல், காலை 5 மணி வரை சுக்கு காபி வழங்கப்படுகிறது. ஜன.15 வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...