|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

காசநோய் குறித்து பேராசிரியர் நாராயணசாமி பாலாஜி.


காசநோய் தடுப்பு குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் பேராசிரியர் நாராயணசாமி பாலாஜி. காசநோய் குறித்து பாலாஜி குறிப்பிடுகையில், "காசநோய் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு இரண்டு பேரை கொன்று வருகிறது. காசநோய் எனப்படும் டி.பி., ஒரு மருந்துக்கு மட்டும் கட்டுப்படக்கூடியதல்ல என்பதால் அதை குணப்படுத்துவது எளிதானதல்ல. சர்க்கரை நோய் போன்று இந்த நோயும் பலவிதங்களில் உடலை பாதிக்கச் செய்கிறது.

நுரையீரல் மட்டுமல்லாது மூளை மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் இந்த காசநோய் பாக்டீரியாக்கள் புகுந்து கொண்டு, ஒட்டு மொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தடுத்து விடுகிறது. கிராமப்புறம் மற்றும் ஏழை மக்களை மட்டுமே இந்த நோய் தாக்கும் என கூற முடியாது. 70ம் ஆண்டுகளில் தான் இந்த நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன், இந்த நோயுடன் போராடியே ஏராளமானவர்கள் மாண்டு போய் விட்டனர். கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலையில் உள்ளவர், குழந்தைகள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அப்போது, இந்த பாக்டீரியாக்கள் எளிதாக தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த நோயை ஒழிக்க நவீன மருத்துவம் தேவைப்படுகிறது' என்றார். இந்த பாதிப்பை இவர் கண்டறிந்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பாலாஜியின் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வருப் பட்நாகர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விருது 5 லட்ச ரூபாய் ரொக்கமும், 65 வயது வரை மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் கொண்டது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...