|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

பஸ் கட்டண உயர்வு குறித்து நாளிதழ்களில் விவரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!


 தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு விவரத்தை நாளிதழ்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 3 வாரங்களுக்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை சமர்ப்பிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில், கட்டண உயர்வை அறிவித்து விட்டு, அதை முறைப்படி மக்களுக்கு என்று முதல் அமலாகிறது என்பதைச் சொல்லாமல், இரவோடு இரவாக, ஏதோ திருடர்கள் போல அமல்படுத்தியுள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதை நீதிபதிகள் ஏற்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதே பிரச்சினை தொடர்பாக மேலும் ஒரு வழக்கும் தாக்கலானது. இரண்டையும் சேர்த்து விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டண உயர்வு எவ்வளவு என்பது குறித்த முழு விவரத்தையும் பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்களில் விளம்பரமாக அரசு வெளியிட வேண்டும். ஊடகங்கள் வாயிலாக இதை அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து 3 வாரங்களுக்குள் அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...