|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 September, 2011

Alyssa Campanella Should Win Miss Universe 2011


USA! I'm not usually much of a "Go, team, go!" kinda gal, and I'm even less of a beauty pageant fan, particularly when toddlers dressed like prostitutes are involved. BUT, that said, I can't think of a more appropriate person to win the Miss Universe Pageant on Monday, September 12 than Alyssa Campanella, Miss USA 2011. Just one day after the 10 year anniversary of 9/11? Come on, give it up for Miss USA!


I'm not the only one rooting for Campanella -- even people who follow this type of thing expect she'll at least make the Top 4. And I hope she does. To me, she proved herself as pageant royalty at the Miss USA competition when she gave the most non-commital, no-way-anybody-could-take-offense-at-this answer to her Big Question, regarding the legalization of marijuana. (The upshot: She's neither for nor against. Also, she's both.) 


Hell, this girl might even have a future in politics!

இதே நாள்...


  • லத்தின் அமெரிக்கா ஆசிரியர்கள் தினம்
  •  மகாகவி சுப்ரமணிய பாரதியார் இறந்த தினம்(1921)
  •  பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா இறந்த தினம்(1948)
  •  நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது(2001)
  • நேருவின் ஆடம்பரத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி!

    போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். இது தொடர்பான ஆதாரங்களை புத்தகமாக அச்சிட்டு அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் பேசியது: போக்குவரத்துக் கழகங்கள் அதிமுக ஆட்சியில் லாபத்திலும், திமுக ஆட்சியில் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன.


    கடந்த அதிமுக ஆட்சியில் 90 சதவீத பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவும், திமுகவினரும் போக்குவரத்துத் துறையின் பணத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். போக்குவரத்துத் துறையின் பணத்தில் 17 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி. ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    நேரு தனக்காக மட்டும் 8 சொகுசு கார்களை பயன்படுத்தியுள்ளார். அவரது 3 உதவியாளர்களுக்காக 6 கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    இந்த சொகுசு கார்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுகவினரின் குடும்பத்தினர், உறவினர்கள் போன்றோர் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 5 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.
    ஜவாஹர்லால் நேரு, அவரது தந்தை வாங்கிக் கொடுத்த 4 கார்களை மட்டுமே பயன்படுத்தினார். ஆனால், இந்த கே.என். நேரு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பால் கிடைத்த பணத்தில் 8 கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரின் அலுவலகச் செலவு என்ற வகையில் ரூ. 36 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேருவின் வீட்டுக்கு வரும் திமுகவினர், உறவினர்களுக்காக இந்தத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சரின் அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது, திருச்சியில் உள்ள அமைச்சரின் வீடு முகாம் அலுவலகம் என்று கூறப்பட்டு இந்தச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல அமைச்சரின் வருகை செலவு என்ற வகையில் ரூ. 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால்,  குறிப்பட்ட நாளில் பணிமனைகள், அலுவலகங்களுக்கு அமைச்சர் வருகை தந்ததாக குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவில்லை.

    கடந்த திமுக ஆட்சியில் நல்ல நிதியுடன் கவனித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர், நடத்துநர் போன்ற பணிகள் வழங்கப்பட்டன. தருமபுரி மண்டலத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேவைக்கும் அதிகமாக 687 ஓட்டுநர்கள், 964 நடத்துநர்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு பணி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. இவ்வாறு தேவைக்கு அதிகமான நியமனங்களால் அரசுக்கு ரூ. 70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. திருச்சி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு நேரு செல்லும்போது போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. உடனே அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவிடுகிறார். அதன் காரணமாக அரசு பஸ்கள் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 51 லட்சம் விரயம் ஏற்பட்டுள்ளது.

    2010-11-ம் ஆண்டில் மட்டும் திமுகவினர் மற்றும் வேண்டியவர்களுக்காக மட்டும் நேரு 540 இலவச பஸ் பாஸ்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் ரூ. 4 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பலர் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றதன் மூலம் சுமார் ரூ. 23 கோடி விரயம் ஏற்பட்டுள்ளது.

    அதுபோல நேருவின் உறவினர் நிறுவனங்களின் விளம்பரங்கள் பஸ்களில் அதிகமாக இடம் பெற்றதால் போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்க வேண்டிய விளம்பர வருவாய் கிடைக்கவில்லை. கடந்த 3 மாத அதிமுக ஆட்சியில் விளம்பரம் மூலம் ரூ. 1.17 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
    போக்குவரத்து கழகங்களுக்கு ரூ. 2,017 கோடி கடன் நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆடம்பரச் செலவுகளும், லஞ்ச முறைகேடுகளுமே இதற்கு  காரணம். நேரு செய்த செலவுகளை ஆதாரத்துடன் இரண்டு புத்தகங்களாக அச்சிடப்பட்டுள்ளன. அவை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இந்தத் துறை சீர் செய்யப்பட்டு லாபத்துடன் இயங்கும் துறையாக மாற்றப்படும். பஸ் வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

    கொலையும் செய்வாள் பத்தினி !


    நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளத்தில் லாரி டிரைவர் பாபு என்பவர் கடந்த 26.07.2011 அன்று மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறி இறந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து தாளையூத்து போலீசார் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்கு பிறகு 09.09.2011 அன்று பாபுவின் மனைவி உமாவை (27) கைக்குழந்தையுடன் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் சோர்சு சொல்லுவதாவது, தாளையூத்தில் பாபு அவரது மனைவி உமா, இவர்களது வீட்டருகே நல்லசாமி (37) குடும்பத்தோடு குடியிருந்து வந்தார். நல்லசாமி அங்கே லாரி செட் நடத்தி வந்தார். நல்லசாமியிடம் கடந்த 2009 முதல் லாரி டிரைவராக பாபு வேலை பார்த்தார். இதன் காரணமாக பாபு அடிக்கடி வெளியூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதைய நேரங்களில் நல்லசாமி அடிக்கடி உமாவின் வீட்டிற்குள் சென்று வந்ததால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இறுக்கமானார்கள். 

    இதனை அறிந்த பாபு, அங்கிருந்து 2010ம் ஆண்டு தன்னுடைய வீட்டை மாற்றி, மானூர் அருகே உள்ள குறிச்சிக்குளத்தில் குடியேறினார். மேலும், நல்லசாமியிடம் பார்த்த டிரைவர் வேலையை விட்டுவிட்டார். பின்னர் வேறொரு லாரி ஒன்றில் டிரைவர் வேலைக்கு சென்று விட்டார்.பாபு வீடு மாறினாலும் உமாவுக்கும் நல்லசாமிக்கும் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது. இதற்கிடையே 20.107.2011 அன்று தன் வீட்டுக்கு பாபு வந்தபோது, அங்கு உமாவும் நல்லசாமியும் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். ஆத்த்திரம் அடைந்தவர் நல்லசாமி மற்றும் உமாவை தாக்கினார். இதனால் நல்லசாமியும் கர்ப்பமாக இருந்த உமாவும் பாபு உயிரோடு இருந்தால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும். மேலும் தங்களது உல்லாசம் தொடர வேண்டுமானால் பாபுவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். 
    இதையடுத்து கடந்த 26.07.2011 அன்று இரவு பாபு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, உமா பாபுவின் இரு கால்களையும் பிடித்துக்கொள்ள, நல்லசாமி தலையணையால் பாபுவின் முகத்தில் அழுத்தினார். இதனால் மூச்சுத் திணறி பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பின்னர் காலையில் உமா, தன் கணவர் பாபு இறந்துவிட்டாக கூச்சல் போட்டப்படியே வெளியே ஓடினார். அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் பாபுவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் பாபு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


    இதற்கிடையே பாபுவின் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தாளையூத்து போலீசில் புகார் செய்தனர். பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் பாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உமாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாபுவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், பாபு மூச்சுத் திணறி கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. 


    இதனைக்கண்டு அதிர்ந்த தாளையூத்து போலீசார், சந்தேகம் மரணத்தை கொலை வழக்கமாக மாற்றி உமாவை விசாரித்தனர். தனது கணவரை நல்லசாமியுடன் சேர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் கள்ளக்காதலால் ஏற்பட்ட விளைவு என்றார். விசாணை நடத்திய போலீசார், உமாவை கைக்குழந்தையுடன் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கணவனே கண் கண்ட தெய்வம் என்கிற கலாச்சாரம், கல்லறைக்குள் போய்விட்டது என எண்ணத் தோன்றுகிறது உமாவின், அடுத்தவனுக்கு முந்தி விரிப்பு வாழ்க்கை. 

    09 September, 2011

    பாம்பு மசாஜ்!


    ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது பீகார்!


    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவை, பீகார் அரசு, பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளது.

    பீகார் மாநிலத்தில், 2007ம் ஆண்டில், நீர்பாசனத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ் சங்கர் வர்மா. அதே ஆண்டு ஜூலை 6ம் தேதி, சிவ்சங்கர் வர்மாவின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ. 1.43 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஒன்பது கிலோ தங்கக் கட்டிகள், ரூ. 17 லட்சம் ரொக்கம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான பங்கு மார்க்கெட் முதலீட்டுப் பத்திரங்கள், ரூ. 81 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் இதில் அடங்கும். இதையடுத்து, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவ் சங்கர் வர்மா உள்ளிட்ட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, பீகார் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில், வர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பெய்லி சாலையில் உள்ள வர்மாவுக்குச் சொந்தமான மூன்று மாடி ஆடம்பர பங்களாவை, கடந்த 4 ம் தேதி, பீகார் அரசு பறிமுதல் செய்தது. இந்த கட்டடத்தை, மனித வளத்துறையிடம் அளித்து, அதை பள்ளிக்கட்டடமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, பீகார் அமைச்சரவை கடந்த 6ம் தேதி ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து, ரூகான்பூரா குடிசைப் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம், பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நாட்டிலேயே முதன்முறையாக, பீகார் மாநிலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களா பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போலித்தனமான வெற்றிகள் பஞ்சு அருணாசலம்!

    தமிழ்சினிமாவில் போலித்தனமான வெற்றிகள் அதிகரித்து விட்டன என்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார். சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் `நந்தா நந்திதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றுக்கொண்டார்.அதன் பின்னர் பஞ்சு அருணாசலம் பேசிய பேச்சு நச் ரகம். அவர் பேசும்போது, `முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும். ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 120 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. `அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். யார் திறமைசாலி என்பதில் பயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார் ஷிவா நன்றி கூறினார். 

    இதே நாள்...


  • வடகொரியா குடியரசு தினம்(1948)
  •  தஜிகிஸ்தான் விடுதலை நாள்(1991)
  •  தமிழ் எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1899)
  •  அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
  •  கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • இந்த வார ராசி பலன் (9-9-2011 முதல் 15-9-2011 வரை)

    மேஷம்;

    பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். வரவுக்கேற்ற செலவும் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தி மகிழக்கூடும். குடும்பத்தார் அன்பாக இருப்பார்கள்.

    வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பண வரவு அதிகரிக்கும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

    மிதுனம்

    பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப் போடவும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

    வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.

    கடகம்

    பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலம் மேம்படும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

    வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

    சிம்மம்

    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரியோர்கள் ஆசி கிடைக்கும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும்.

    கன்னி

    பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளி போடுவது நல்லது. உடல் நலம் மேம்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் பாசமாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யக்கூடும். பேச்சில் நிதானம் தேவை.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    துலாம்

    பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். பண வரவு தாமதமாகலாம்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

    வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

    விருச்சிகம்

    பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். தபால் மூலம் நல்ல நல்ல செய்தி வரலாம்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

    வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    தனுசு

    பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்ல திட்டமிடக்கூடும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

    மகரம்

    பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வரவுக்கேற்ற செலவும் உண்டு. முக்கிய நபர் ஒருவரை சந்தித்து அவரால் நன்மை அடையக்கூடும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் நலனில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    கும்பம்

    பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வீண் செலவுகளைக் குறைக்கவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    மீனம்

    பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமை இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் புது தெம்பு பிறக்கும்.

    கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு!

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களை திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது.

    ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.

    கிராமத்து விளையாட்டுக்கள்

    விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,

    கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

    நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.

    மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.

    கண்ணாமூச்சி

    கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்

    “கண்ணா மூச்சி ரேரே…

    காரே முட்டே ரே ரே …

    ஒருமுட்டையை தின்னுபுட்டு….

    ஊளை முட்டைய கொண்டுவா ….” என்று பாடுவார்.

    பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.

    சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் மெகா மாநகராட்சியானது!

    சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு 200 வார்டுகளுடன் கூடிய மெகா மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. புதிய விஸ்தரிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள்,15 மண்டலங்கள் இருக்கும். இவற்றிந் விவரங்கள், வாக்குச் சாவடி விவரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை மேயர் சத்தியபாமா, ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

    தற்போதைய சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இதில், 155 வார்டுகள் உள்ளன. இவை 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு இணையாக, சென்னை மாநகரத்தை மாற்றி அமைத்தால் தான் மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி பெற்று, அடிப்படை வசதிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும்.

    இதை கருத்தில் கொண்டுதான் சென்னை மாநகராட்சியிலுள்ள 155 வார்டுகளை 107 வார்டுகளாக மாற்றி அமைத்தும், சென்னையை சுற்றியுள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 93 வார்டுகளாக மாற்றி மறுசீரமைத்து 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை நகரம் 424 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

    விரிவாக்கம் செய்வதற்கான சட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த வார்டுகள் மறு நிர்ணயம் செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த 200 வார்டுகள் விவரங்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கூட்டத்தில் அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், தற்போதுள்ள 10 மண்டலங்கள் 15 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியான வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,384 ஆண் வாக்குச் சாவடிகளும், 1,384 பெண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,109 பொதுவான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 4,877 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    58 வார்டுகள் பெண்களுக்கு

    கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 200 வார்டுகளில் 26 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 174 வார்டுகளில் 33.33 சதவீத அடிப்படையில் 58 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 116 வார்டுகள் பொது வார்டுகளாகவும், 17 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 மாநகராட்சி மண்டலங்கள் விவரம்:

    மண்டலம்-1 திருவொற்றியூர் (1 முதல் 14 வார்டுகள்)
    மண்டலம்-2 மணலி (15 முதல் 21 வார்டுகள்)
    மண்டலம்-3 மாதவரம் (22 முதல் 33 வார்டுகள்)
    மண்டலம்-4 தண்டையார்பேட்டை (34 முதல் 48 வார்டுகள்)
    மண்டலம்-5 ராயபுரம் (49 முதல் 63 வார்டுகள்)
    மண்டலம்-6 திருவிகநகர் (64 முதல் 78 வார்டுகள்)
    மண்டலம்-7 அம்பத்தூர் (79 முதல் 93 வார்டுகள்)
    மண்டலம்-8 அண்ணாநகர் (94 முதல் 108 வார்டுகள்)
    மண்டலம்-9 தேனாம்பேட்டை (109 முதல் 126 வார்டுகள்)
    மண்டலம்-10 கோடம்பாக்கம் (127 முதல் 142 வார்டுகள்)
    மண்டலம்-11 வளசரவாக்கம் (143 முதல் 155 வார்டுகள்)
    மண்டலம்-12 ஆலந்தூர் (வார்டு 156 முதல் 169 வார்டுகள்)
    மண்டலம்-13 அடையாறு (170 முதல் 182 வார்டுகள்)
    மண்டலம்-14 பெருங்குடி (183 முதல் 191 வார்டுகள்),
    மண்டலம்-15 சோழிங்கநல்லூர் (192 முதல் 200 வார்டுகள்).

    சீனா... ஆண்டுதோறும் 2 மில்லியன் தற்கொலைகள்!

    சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

    இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

    அதிக அளவு தற்கொலையில் ஈடுபடுவோர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டோர்தான் என்கிறது இந்த அறிக்கை. 75 சதவீத தற்கொலைகள் கிராமங்களில் நடப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இன்று செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    06 September, 2011

    என்.ஐ.டி.யின் பல படிப்புகள் அங்கீகாரம் பெறவில்லை!


    நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ் அளிக்கும் பாதிக்கும் மேலான படிப்புகளுக்கு தேசிய அங்கீகாரக் கழகத்தின் அங்கீகாரம் பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது தேசிய கணக்காளர் ஒருவர் இது குறித்து சுட்டிக்காட்டிப் பேசுகையில், "என்.ஐ.டி. கல்வி நிறுவனம் 88 இளநிலை படிப்புகளையும், 191 முதுநிலை படிப்புகளையும் வழங்குகிறது. இதில் 45 இளநிலை படிப்புகளும், 137 முதுநிலை படிப்புகளும் அங்கீகாரம் பெறாதவை. இதன் மூலம், தேசிய அங்கீகாரக் கழகம் நிர்ணயித்த தரத்துடன் இப்படிப்புகள் அமையவில்லை என்பது நிரூபணமாகிறது. சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்புகளில் சில சமயம், நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாகவும், ஒரு சில ஆண்டுகளில் குறைவாகவும் சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்வியாண்டுகளில், 1.38 முதல் 42.31 சதவீதம் இடங்கள் இளநிலை படிப்புகளிலும், 3.13 முதல் 87 சதவீத இடங்கள் முதுநிலை படிப்புகளிலும் காலியாகவே இருந்துள்ளன. இதேப்போல ஒரு சில கல்வியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட மாணவ எண்ணிக்கையை விட 0.83 முதல் 23.89 சதவீதம் இளநிலை படிப்புகளிலும், 3.30 முதல் 116.67 சதவீதம் முதுநிலை படிப்புகளிலும் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது கணக்காளர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சில புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாடப்பிரிவுகளின் தேவையை எந்த தரப்பிலும் கருத்துக் கணிப்பை நடத்தாமலும், அதற்கான தேவையை ஆராயாமலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துர்காபுர் மற்றும் சில்சார் என்.ஐ.டி.க்களில் 2009-10ம் கல்வியாண்டில் 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பாடப்பிரிவுகளில் தொடர்ந்து காலியிடங்களே நீடிக்கிறது. இதேப்போல குருக்ஷேத்ரா, போபால், சிலாச்சர், சூரத்கல் என்.ஐ.டி.க்களில் கடந்த கல்வியாண்டுகளில் அறிமுகமான 12 பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்களிடையே வரவேற்பில்லை என்பது தொடர்ந்து நிலவும் காலியிடங்களே சான்றாக உள்ளது" என்றார். எனவே, என்.ஐ.டி.க்களின் உள்கட்டமைப்புப் பணிகளை சீராக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

    தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க புதுதிட்டம்!

    மொபைல் போனில் வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களை தவிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள புது நடைமுறை வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடுபடுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், பயன்படுத்துவோருக்கு பல தொல்லைகளும் ஏற்படுகிறது. இந்திய மக்கள் தொகையில், சுமார் 85 கோடிக்கும் மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துவதாக தெரிகிறது.

    இந்நிலையில் மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்களும் உண்டு.

    சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே வீட்டுக் கடன் வேண்டுமா சார் என்று கேட்டு ஒரு வங்கியிலிருந்து வந்த அழைப்பு அவரைக் கடுப்பாக்கியதை நாடே அறியும்.அதுகுறித்த புகார்கள் பெருகி வந்த நிலையில், மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம், 'தேவையற்ற அழைப்புகளின் பதிவு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.

    ஆனால், இந்த முறை நுகர்வோரை முழுமையாக சென்றடையவில்லை. இதையடுத்து தற்போது, "தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு" என்ற புதிய முறை வரும் 27ம் தேதி முதல் அறிமுகப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதன்படி, 140 என்ற எண்ணை வர்த்தகம், விற்பனை, சேவை விபரங்கள் உள்ளிட்டவைகளை அறிவிக்க மொபைல்போன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேறு எண்களை பயன்படுத்த கூடாது.

    தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பும் மக்கள், இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு எந்த தேவையில்லாத அழைப்புகளும் வராது. அதை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    கவர்ச்சிப் பெண்களின் நடனத்தால் கல்லா கட்டும் சீன ரயில்வே!

    சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில் சமீபகாலமாக கவர்ச்சி அழகிகளின் நடனத்தால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.

    சீன ரயில் போக்குவரத்து உலகளவில் புகழ் பெற்றது. உலகின் அதிவேக ரயில், அதிக வசதிகள் கொண்ட ரயில் என பல சிறப்பு அம்சங்களை கொண்டது. இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் புதுவித நடனம் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது.

    சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெட்ரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம்பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது. ஷாங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடனமங்கைகள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என பல ஸ்டைல்களில் தங்கள் நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.

    மேலும் தங்கள் நடனத்திற்கு இடையே அவ்வப்போது தங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து பயணிகளை சூடாக்குகின்றனர். இதைபோல சுரங்கப் பாதை ரயில்கள் கடந்து செல்லும், நாஞ்சிங் சுரங்கப் பாதையிலும் அவ்வபோது நடன மங்கைகளின் ஆட்டத்தை பார்க்க முடிகிறது.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் ஆடிவந்த நடன மங்கையர், மக்கள் மத்திய பிரபலமடைந்து உள்ளனர். இவர்கள் சில நேரத்தில் ரயில்களிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது உண்டு என அவர்களின் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

    இந்த நடனத்தால், நீண்டதூர ரயில் பயணத்தை, பயணிகள் உற்சாகமாக போக்குகின்றனர். இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

    இந்த நடன மங்கைகளின் கூத்துகளை சில பயணிகள் தங்கள் மொபைல்போன்களில் படப்பிடித்து, அவற்றை இணைதளத்தில் உலாவ விட்டுள்ளனர். இதில் உற்சாகமடையும் நடன மங்கைகள் பல கவர்ச்சி மாடல்களில் நின்று ஆடி போஸ் கொடுக்கின்றனர். நடன மங்கைகளின் ஆடைகளும் சீனாவில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு 50 % இதயநோய் தாக்கும் அபாயம்!

    மனித வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொடிய நோய்களான எய்ட்ஸ், புற்றுநோய், ஆகியவற்றின் வரிசையில் தீராத நோயாகி கடைசி வரை மெல்லக்கொல்லும் நோயாக திணறவைக்கிறது சர்க்கரை நோய். பெயரைக்கேட்டால் இனிப்பாக இருந்தாலும் இந்நோய் தாக்கியவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது என்பது உண்மை.

    மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றினால் உருவாகும் சர்க்கரை நோய்க்கு இந்தியாவில் 18 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் இந்நோய்க்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏன் வருகிறது சர்க்கரைநோய்? உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடினால் ஏற்படும் இந்த நீரிழிவு நோய் பரம்பரை வழியாகவும், உடல் பருமனாலும் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பது உடல் பருமனுக்கு காரணமாகிறது. இதனால் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் ஏற்பட்டு சிறு வயதிலேயே நீரிழிவு நோய்க்கு பலரும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மனஅழுத்தம் நிறைந்த பணியில் இருப்பவர்களை இந்நோய் எளிதில் தாக்கிவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு 2007-ம் ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலின்படி இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தையும், கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    கண்களை தாக்கும்: நீரிழிவு நோயாளிகளுக்கு சட்டென்று பாதிப்பு ஏற்படுவது கண்கள்தான். 10 முதல் 20 சதவிகிதம் பேர் கண் தொடர்பான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் சிறிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு கண்பார்வை சேதமடைகிறது. இதனால் கண்களில் கட்டிகள் வருவதுடன், கருவிழியில் புண்களும் தோன்றுகின்றன. இதனால் விழித்திரை கிழிந்து பார்வை நரம்புகளில் வீக்கங்களும் ஏற்படுகின்றன.

    நரம்புகளை பாதிக்கும் நீரிழிவு: பத்தாண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் பசி மயக்கம் ஏற்பட்டு வலிப்பும் வரும் என்கின்றனர். நரம்புமண்டலம் பாதிக்கப்படுவதால் கண் பார்வை குறைவதோடு, முக்கியமாக பக்கவாதம் வரும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    கால்களில் அபாயம்: கால் நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலி, வீக்கம், புண்கள் தோன்றி கால் விரல்கள் கருகிவிடுகின்றன. மேலும் ரத்த ஓட்டம் குறைவதால் உணர்ச்சியற்ற தன்மை உருவாகிறது. இதனால் கால்களில் காயம் ஏற்பட்டாலும் கவனிக்காமல் விட்டு விடுவதால் காலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கால்களை பாதுகாக்க செருப்புகள் இல்லாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதயநோய் வாய்ப்பு: சர்க்கரை நோய் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு இதயநோய் ஏற்படும் பாதிப்பு அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை 25 வயது முதல் 65 வயது வரை உள்ள மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவை சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம் மற்றும் இருதய பாதுகாப்பு மையத்தின் இயக்குனரும் தலைவருமான டாக்டர் எஸ். தணிகாசலம் வெளியிட்டுள்ளார்.

    அதில் சரியான உடல் அமைப்பினை காட்டிலும் நகரங்களில் வசிப்பவர்கள் 47.92 சதவிகிதம் பேரும், கிராம மற்றும் நகர பகுதிகளிடையே வசிப்பவர்களில் 53,63 சதவிகிதத்தினரும், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களில் 28.34 சதவிகிதம் பேரும் உடல் பருமனைக் கொண்டிருந்தது தெரிந்தது ஆய்வில் பங்கேற்ற 8800 பேரில் 1200 பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருப்பது கண்டறியப்பபட்டது. ஆயிரம் பேர் மட்டுமே எந்தவித பிரச்சினையும் இன்றி இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு இதய நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வில் முடிவில் மருத்துவர் எஸ். தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

    உணவுப்பழக்கம்: நீரிழிவு நோய் தாக்கியவர்கள் உணவுக்கட்டுப்பாட்டினை பின்பற்றினால் நோயினை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். சரியான நேரத்தில் உண்ணப்படும் உணவுடன் நார்ச்சத்து மிக்க கோவைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கீரை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒமேக 3 கொழுப்பு நிறைந்த மீன் எண்ணெய், பாதம், பிஸ்தா போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    புரதச்சத்து மிக்க பால், முட்டை, கோழிஇறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகளும் உண்ணத்தகுந்தவை என உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயை குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது எனக்கூறும் மருத்துவவர்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். இவற்றை தவறாமல் பின்பற்றினால் சர்க்கரை நோய் தாக்கியவர்களும் நீண்ட ஆயுளோடு வாழலாம்.

    தொடர் ஓட்டத்தில் போல்ட் தலைமையிலான ஜமைக்கா அணி மீண்டும் உலக சாதனை!

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளில் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி, உலக சாதனை படைத்தது. கொரியா நாட்டின் டேகு நகரில் 13வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதன் கடைசி நாளில்ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயம் நடத்தப்பட்டது.

    இதில், உலகின் வேகமான மனிதன் என அழைக்கப்படும் உசேன் போல்ட்டின் ஜமைக்கா அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டனர். போல்ட் உடன், நெஸ்டா கார்டர், மைக்கேல் பிராடர், யோகன் பிளேக் ஆகியோர் பங்கேற்றனர்.

    துவக்க வீரர் முதல் சிறப்பாக செயல்பட்ட ஜமைக்கா அணியினர், 400 மீட்டர் தூரத்தை 37.04 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர். இதன்மூலம், அதே அணியினர் 2008ம் ஆண்டில் படைத்த 37.10 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

    போட்டிகளின் முடிவில், பதக்க பட்டியலில் 12 தங்கம் வென்ற அமெரிக்க முதலிடத்தை பிடித்தது. 8 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை பெற்றது. 2வது இடத்தை 9 தங்கம் வென்ற ரஷ்யாவும், 7 தங்கம் பெற்ற கென்யா 3வது இடத்தையும், 4 தங்கம் பெற்று சாதனை படைத்த ஜமைக்கா 4வது இடத்தையும் பெற்றது. இந்தியாவிற்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் தங்கள் தேசியகொடியை ஏந்தி மைதானத்தை சுற்றி வந்து, ரசிகர்களின் உற்சாகமான கைதட்டல்களை பெற்றனர்.

    05 September, 2011

    செருப்பு வாங்க மும்பைக்கு தனி விமானம் மாயாவதி!

    அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனக்கு சிலை வைக்க உத்தரவிட்டு சர்ச்சையை கிளப்பினார் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி.  அரசு உயர் அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த சர்ச்சை ராணி,   மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்குகிறார்.

       விக்கிலீக்ஸ் இணையதளம் இது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

     "புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.
    மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே 9 சமையல்க்காரர்கள் மற்றும் 2 சுவை அறிபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
    இத்தகவல் அக்டோபர் 23, 2008 தேதியில் பதிவாகியுள்ளது.

    அதே போன்று, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்வது வழக்கம்" என்ற தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.  

    குறும்படம் முன்டாசுப்பட்டி !


    7 ம் அறிவு!


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...