|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 April, 2012

இதே நாள்...


  • சர்வதேச விண்வெளி பயண தினம்
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)

தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு குறித்து ஐநா யோசனை!!

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐநாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர் ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன.அதே போல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சில ஆலோசனைகள் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தயாநிதி வழக்கில் முரண்பட்ட நிலை ஏன்? உச்ச நீதிமன்றம்!

"2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."2ஜி அலைக்கற்றை' முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.


இந்த வழக்கில் "பொதுநல வழக்கு மையம்' (சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன்) என்ற அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார்.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்' என்று அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அத்துடன், "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற அமைப்பு சார்பிலும் பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகூர்த்தா சார்பிலும் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இவை தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவரது வாதம்:இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் ஆஜராகியுள்ள டெலிகாம் வாட்ச் டாக் அமைப்பின் செயலர் அனில் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்று அனில்குமார் தனது மனுவில் கூறியுள்ளார். ஆனால், அவரே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பிப்ரவரி 5ம் தேதி அனுப்பிய கடிதத்தில், அதற்கு முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், உள்நோக்கத்துடன் மாறனுக்கு எதிராக சிவசங்கரன் புகார் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தயாநிதிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனில் குமார், வழக்கில் சிவசங்கரனையே எதிரியாகச் சேர்க்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.


ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, புகார் கொடுத்த நபர் திடீரென்று அதற்கு மாறான கருத்தை எப்படிக் கூறலாம்? இதனால், அனில் குமாரின் நம்பகத் தன்மை மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் தோன்றுகிறது'' என்று கே.கே. வேணுகோபால் வாதிட்டார்.அது மட்டுமின்றி, வழக்கில் ஆஜராகும் பிரசாந்த் பூஷண் மேலும் இரு மனு தாரர்களுக்காக வாதாடுகிறார். அவர்கள் கூறும் புகார்களின் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது'' என்றார் வேணுகோபால்.இதைக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அனில்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர்.அனில் குமார் எந்தச் சூழலில் சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதினார் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு முரணாகக் கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் என்ன என்பதையும் அவர் ஒரு வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மறக்கப்பட்ட 1947 மே 31 சம்பவம்!

 வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்கின்றனர், நம்மைவிட நாகரிகமும் அறிவியல் முன்னேற்றமும் உள்ள அவர்கள் ஓசையே இல்லாத வான ஊர்திகளில் வந்து பூமியில் இறங்கி சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்கின்றனர் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகின்றனர்.ஆனால் திட்டவட்டமான நிரூபணங்கள் இல்லாததால் இவற்றையெல்லாம் கற்பனை என்றோ, கனவுகளின் வெளிப்பாடு என்றோ இதுவரை கூறி வருகிறார்கள்.அதே வேளையில் இது சாத்தியம் இல்லை என்று எவராலும் கூற முடிவதில்லை. இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை.அப்படித்தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒடிசா மாநிலத்துக்கு சில வேற்றுகிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.


ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.வேற்றுகிரகவாசிகள்: ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31-ம் தேதி வந்து இறங்கினர். தீரம் மிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றிவந்தனர். பிறகு அவர்களை அந்த இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.


அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராமவாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ""பட்ட சித்திரக்காரர்'' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு ஓலைச் சுவடியில் சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒடியா வார இதழ் ஒன்று ஜூன் 15-ம் தேதி அச் செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் ""கிராமவாசிகளின் அதீத கற்பனை'' என்ற காட்டமான விமர்சனத்தோடு.இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.


எந்திர புருஷர்கள்: கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுகிரக மனிதர்கள் எந்திர புருஷர்களாக வரையப்பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவோ, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.சிலருடைய கைகள் வட்டவடிவில் பந்து போல உருண்டிருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்தவரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.


இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல் என்ற இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து புரியில் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால், வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் ""முதலில் சந்தித்த'' வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக்கூடும்

7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு!

 தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை 48 மணி நேரத்துக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று 7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.அந்தந்த மாநில ஆளுநர்களின் பரிசீலனையில் உள்ள இந்த மனுக்கள் பற்றிய விவரங்களை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை, சில மாநிலங்கள் கடைபிடிக்காததை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் நிறைவேற்றவில்லை.மரண தண்டனை அளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் கருணை மனுக்கள் அனுப்பியுள்ள, அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் உச்ச நீதிமன்றத்தை அணுகாத அவர்களது வழக்குகளை ஆராய விரும்புவதாக இருவர் பெஞ்ச் தெரிவித்தது.


"அவர்களது வழக்குகள் ஊடகங்களால் பேசப்படவில்லை.நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் பின்னணி கொண்ட வழக்குகளைத்தான் ஊடகங்கள் பேசுகின்றன' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.மரண தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டதற்கு நீதித்துறை எந்த அளவுக்கு பொறுப்பாளியாக உள்ளது என்பதை ஆராய விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


18 கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு ஏப்ரல் 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற தேவேந்திர பால் சிங் புல்லரின் புகார் மனுவை விசாரித்தபோது இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தான் சமர்ப்பித்த கருணை மனு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் அளவுக்கு அதிகமான காலம் எடுத்துக் கொண்டதாக புல்லர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது ஜெயலலிதா

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் அதிபர் ராஜபட்ச அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது என அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது, இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏப்ரல் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதில் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டை அனுப்ப முடிவு செய்தேன்.


இலங்கையில் வாழும் தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க ஐ.நா. சபையை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன்.


இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து அதை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்று பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இருப்பினும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதை நான் பாராட்டினேன்.நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் நம்பினேன்.


அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் உதவும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப சம்மதித்தேன். ஆனால், சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாதது போல் அமைந்துள்ளது. அதிபர் ராஜபட்ச உள்பட சிங்கள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள், விருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது ஏதோ சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது.ஜெனீவாவில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மென்மையான தீர்மானத்தை கூட இலங்கை அதிபர் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபட்ச அரசு தடுத்து நிறுத்தவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபட்ச அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் உண்மைகளைப் பற்றி இலங்கை அதிபருடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபட்சவுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றார் ஜெயலலிதா.

10 April, 2012

மாறுமா இந்த கலாச்சாரம்?



ரு மனிதனின் இறப்பை இப்படி பண வரவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் மக்களிடம் வந்ததற்கு யார் காரணம்? அரசியல்வாதிகளா அல்லது பொதுமக்களா? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த சி.பி.ஐ.-க்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்தது. தி.மு.க. சார்பில் பெரியண்ணன் அரசு போட்டியிட்டார். கடுமையான போட்டிக்கு இடையிலும் தனது எளிமையான பிரச்சாரம், மக்களிடம் அணுகும் முறை போன்ற காரணங்களால் மக்களிடம் வரவேற்பை பெற்றார் முத்துக்குமரன். பெரிய கட்சிகள் பணத்தை அள்ளித் தெளித்தாலும், தனது எளிமையால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜெயித்தார்.

ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை பெற்றுத்தர முயற்சித்து வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகளுக்காக அதிகப்படியான கேள்விகளை கேட்ட உறுப்பினர் என்ற பெருமையை முத்துக்குமரன் பெற்றிருந்தார். இப்படி தனது அரசியல் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்த சில மாதங்களிலே அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என கேள்விப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட நல்ல மனிதனின் இழப்பு அந்த தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். இவரது இறப்பால் வரப்போகும் இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகள் எவ்வளவு கொடுக்கும் என்ற பேச்சுகள் அந்த தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. 

ஓட்டுக்கு காசு வாங்கும் மக்களின் இந்த மனோபாவத்திற்கு யார் காரணம்? ஆளுங்கட்சி தனது வெற்றியை தக்க வைக்கவும், எதிர்கட்சி தங்களது இருப்பை உறுதிப்படுத்தவும், மற்ற கட்சிகள் தங்கள் வரவை பதிவு செய்யும் தளமாக இடைத்தேர்தலை பார்க்கின்றனர். இதனால் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி வெற்றி பெற போராடுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது 'ஓட்டுக்கு பணம்'. எப்படியும் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயாவது கிடைத்துவிடும் என்ற கணக்கை போட ஆரம்பித்துவிடுகின்றனர் பொது மக்கள். இதில் யாரை குறை சொல்வது? பணம் கொடுப்பவரையா? பணம் வாங்குபவரையா?  

முத்துக்குமரன் இறப்பால் வரும் இடைத்தேர்தலுக்கு கிடைப்பது சில ஆயிரங்கள் தான், ஆனால் அவர் உயிருடன் இருந்தால் தனது தொகுதி மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பெற்றுத் தந்திருப்பார் என்பதை மக்கள் யோசித்து பார்த்தால் புரியும்.இனிமேல் சட்டசபை எம்.எல்.ஏ.-கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது. தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்களோ என்று பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மாறுமா இந்த கலாச்சாரம்?

இதே நாள்...


  • சர்வதேச தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)
  •  ஆப்பிள் 1 உருவாக்கப்பட்டது(1976)
  •  விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)
  •  ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)
  •  மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம்(1869)

05 April, 2012

இதே நாள்...

  • பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
  • அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1782)
  • மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையை நிறைவு செய்தார்(1930)
  • ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)

ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும்!


நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.பேசுகையில், நாட்டில் உள்ள சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து செயற்படும் நாடு கடந்த அரசின் தலைவர் ருத்திரகுமாரனைக் கைது செய்யும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த நாதாரி தெரிவித்துள்ளது!.

04 April, 2012

DECEMBAR POOKAL MOVIE


இதே நாள்...


  • செனிகல் குடியரசு தினம்
  • அங்கோலா அமைதி தினம்
  • உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது(1973)
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது(1975)
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1855)

ஜெனிவா தோல்வியின் எதிரொலியே இலங்கையின் புலிக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன எனவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளனர் எனவும், புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தியால் இந்தியா கவலை அடைந்துள்ளது எனப் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் வைத்தே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் தமிழக போலீஸ் தலைவரும் இதை மறுத்துள்ளார்.


ஆனாலும் இந்தியா மீது திட்டமிட்டே இலங்கை இவ்வாறு பழிசுமத்தியுள்ளதாக தில்லி கருதுகிறது.அந்த செய்தியில் புலனாய்வு அமைப்பை ஆதாரமாக காட்டியுள்ளதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக இந்தியா கருதுகிறது எனவும் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சக மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், இலங்கை இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் நினைவுச் சின்னம்!

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தீரன் சின்னமலைக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:விடுதலைப் போராட்ட வீரர்களையும்; தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும்; சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களையும்; மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர்களையும் கௌரவிக்கும் விதத்தில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைப்பதிலும்; திருவுருவச் சிலைகள் அமைப்பதிலும்; அரசு கட்டடங்களுக்கு அவர்களது பெயர்களை வைப்பதிலும்; முன்னோடியாக விளங்குவது அதிமுக அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.


பரம்பரை பரம்பரையாய் அடிமைத் தளையில் சிக்குண்ட நம் இந்திய நாடு, தற்போது, உரிமை பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற தியாகச் சீலர்கள், கிளர்ந்து எழுந்து; தங்கள் வாழ்வை துச்சமென மதித்து; அன்னை பாரதத்தின் அடிமைத் தளையை தகர்த்தெறிய பாடுபட்டனர். இத்தகைய விடுதலைப் போரில், தமிழகத்திலும் பல தலைவர்கள் தோன்றி தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த விடுதலைப் போராட்டத்தில், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கியவர் மாவீரர் தீரன் சின்னமலை .சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் புரட்சித் தலைவர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.


எனது ஆட்சிக் காலத்தில், சென்னை, அண்ணா சாலையில், தீரன் சின்னமலை அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதோடு; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையையும் நான் அளித்தேன். 1995 ஆம் ஆண்டு தீரன் சின்னமலை அவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், காங்கேயத்தில், நினைவு விழா நடத்தப்பட்டு; அவ்விழாவில் அவரது வாரிசுகள், கௌரவிக்கப்பட்டனர். எனது ஆட்சிக் காலத்தில் தான், கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கரூரைத் தலைநகராகக் கொண்டு தீரன் சின்னமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில், அவரது நினைவு நாளான, ஆடி மாதம் 18-ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003 ஆம் ஆண்டு நான் உத்தரவிட்டேன். தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், 30 லட்சம் ரூபாய் செலவில், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம், ஓடாநிலையில் மணிமண்டபம் என்னால் 2006 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
தியாகி தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாது என்ற நிலைக்கு வந்த ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து; சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர்.  மாவீரர் தீரன் சின்னமலையை தூக்கிலிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர், விஜயலட்சுமி பழனிசாமி 30 மார்ச், 2012, அன்று இந்த மாமன்றத்திலே கோரிக்கை வைத்தார்.


இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக, நன்மைக்காக பாடுபட்ட நல்லோர் அனைவருக்கும் தனது நன்றியறிதலைக் காட்டி வரும் அரசு எங்கள் அரசு. இந்த உணர்வின் அடிப்படையில், உறுப்பினர்  விஜயலட்சுமி பழனிசாமி கோரிக்கையை ஏற்று, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான, சங்ககிரியில், நினைவுச் சின்னம் விரைவில் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.எனது தலைமையிலான அரசின் இந்த முடிவை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையினைத் தெரிவித்து, இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்த்ததில் பிடித்தது !

உங்கள் கண்கள் புதைக்கபடுவதை விட
எங்கள் உடலில் விதைத்துவிடுங்கள்


Pachilankuruthi - Tamil Science Fiction Thriller Short Film


03 April, 2012

இதே நாள்...

  • உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)
  • மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
  • ஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)
  • வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)

IPL 5 Schedule 2012






As we know IPL 5 is going to start in April 4, 2012. So, Following are the IPL 5 Schedule.
April 4: Chennai Super Kings (CSK) vs Mumbai Indians(MI)
April 5: Kolkata Knight Riders (KKR) vs Delhi Daredevils (DD)
April 6: Mumbai Indians(MI) vs Pune Warriors
April 6: Rajasthan Royals (R R) vs Kings XI Punjab
April 7: Royal Challengers Bangalore (RCB) vs Delhi Daredevils
April 7: Deccan Chargers (DC) vs Chennai Super Kings (CSK)
April 8: Rajasthan Royals (R R) vs Kolkata Knight Riders (KKR)
April 8: Pune Warriors vs Kings XI Punjab
April 9: Deccan Chargers (DC) vs Mumbai Indians(MI)
April 10: Royal Challengers Bangalore (RCB) vs Kolkata Knight Riders (KKR)
April 10: Delhi Daredevils (DD)Chennai Super Kings (CSK)
April 11: Mumbai Indians(MI) vs Rajasthan Royals (R R)
April 12: Chennai Super Kings (CSK) vs Royal Challengers Bangalore (RCB)
April 12: Kings XI Punjab vs Pune Warriors
April 13: Kolkata Knight Riders (KKR) vs Rajasthan Royals (R R)
April 14: Delhi Daredevils (DD) vs Deccan Chargers (DC)
April 14: Pune Warriors vs Chennai Super Kings (CSK)
April 15: Kolkata Knight Riders (KKR) vs Kings XI Punjab
April 15: Royal Challengers Bangalore (RCB) vs Rajasthan Royals (R R)
April 16: Mumbai Indians(MI) vs Delhi Daredevils
April 17: Rajasthan Royals (R R) vs Deccan Chargers (DC)
April 17: Royal Challengers Bangalore (RCB) vs Pune Warriors
April 18: Kings XI Punjab vs Kolkata Knight Riders (KKR)
April 19: Deccan Chargers (DC) vs Delhi Daredevils
April 19: Chennai Super Kings (CSK) vs Pune Warriors
April 20: Kings XI Punjab vs Royal Challengers Bangalore (RCB)
April 21: Chennai Super Kings (CSK) vs Rajasthan Royals (R R)
April 21: Delhi Daredevils (DD) vs Pune Warriors
April 22: Mumbai Indians(MI) vs Kings XI Punjab
April 22: Deccan Chargers (DC) vs Kolkata Knight Riders (KKR)
April 23: Rajasthan Royals (R R) vs Royal Challengers Bangalore (RCB)
April 24: Pune Warriors vs Delhi Daredevils
April 24: Kolkata Knight Riders (KKR) vs Deccan Chargers (DC)
April 25: Kings XI Punjab vs Mumbai Indians(MI)
April 25: Royal Challengers Bangalore (RCB) vs Chennai Super Kings (CSK)
April 26: Pune Warriors vs India Deccan Chargers (DC)
April 27: Delhi Daredevils (DD) vs Mumbai Indians(MI)
April 28: Chennai Super Kings (CSK) vs Kings XI Punjab
April 28: Kolkata Knight Riders (KKR) vs Royal Challengers Bangalore (RCB)
April 29: Delhi Daredevils (DD) vs Rajasthan Royals (R R)
April 29: Mumbai Indians(MI) vs Deccan Chargers (DC)
April 30: Chennai Super Kings (CSK) vs Kolkata Knight Riders (KKR)
May 1: Deccan Chargers (DC) vs Pune Warriors
May 1: Rajasthan Royals (R R) vs Delhi Daredevils
May 2: Challengers Bangalore vs Kings XI Punjab
May 3: Pune Warriors vs India Mumbai Indians(MI)
May 4: Chennai Super Kings (CSK) vs Deccan Chargers (DC)
May 5: Kolkata Knight Riders (KKR) vs Pune Warriors
May 5: Kings XI Punjab vs Rajasthan Royals (R R)
May 6: Mumbai Indians(MI) vs Chennai Super Kings (CSK)
May 6: Royal Challengers Bangalore (RCB) vs Deccan Chargers (DC)
May 7: Delhi Daredevils (DD) vs Kolkata Knight Riders (KKR)
May 8: Pune Warriors vs Rajasthan Royals (R R)
May 8: Deccan Chargers (DC) vs Kings XI Punjab
May 9: Mumbai Indians(MI) vs Royal Challengers Bangalore (RCB)
May 10: Rajasthan Royals (R R) vs Chennai Super Kings (CSK)
May 11: Pune Warriors vs Royal Challengers Bangalore (RCB)
May 12: Kolkata Knight Riders (KKR) vs Mumbai Indians(MI)
May 12: Chennai Super Kings (CSK) vs Delhi Daredevils
May 13: Rajasthan Royals (R R) vs Pune Warriors
May 13: Kings XI Punjab vs Deccan Chargers (DC)
May 14: Royal Challengers Bangalore (RCB) vs Mumbai Indians(MI)
May 14: Kolkata Knight Riders (KKR) vs Chennai Super Kings (CSK)
May 15: Delhi Daredevils (DD) vs Kings XI Punjab
May 16: Mumbai Indians(MI) vs Kolkata Knight Riders (KKR)
May 17: Kings XI Punjab vs Chennai Super Kings (CSK)
May 17: Delhi Daredevils (DD) vs Royal Challengers Bangalore (RCB)
May 18: Deccan Chargers (DC) vs Rajasthan Royals (R R)
May 19: Kings XI Punjab vs Delhi Daredevils
May 19: Pune Warriors vs Kolkata Knight Riders (KKR)
May 20: Deccan Chargers (DC) vs Royal Challengers Bangalore (RCB)
May 20: Rajasthan Royals (R R) vs Mumbai Indians(MI)
May 22: Qualifier 1 First Placed Team vs Second Placed Team
May 23: Elminator Third Placed Team vs Fourth Placed Team
May 25: Qualifier 2 Winner of Eliminator vs Loser of Qualifier1
May 27: Final Winner of Qualifier 1 vs Winner of Qualifier 2

பார்த்ததில் பிடித்தது!


‎3 படம் பார்த்தேன்...
தனுஷ்க்கு 1 qst..
உங்க அண்ணனும் சரி உங்க மனைவியும் சரி உங்கள லூஸு பயலாவே எதுக்கு காட்றாங்க..
எதுவும் உண்மையாவே இருக்குதா...
aishwarya க்கு 1 reqst...
உங்க கணவர் படதுல்ல இருக்ற ஒரு dialouge இப்போ உங்களுக்கு கரெக்டா இருக்கும்...
"நமக்கு எது வருதோ, என்ன முடியுமோ அத மட்டும்தான் செய்யணும்"
இந்த மாதரி ஓவர் confidence உடம்புக்கு நல்லது இல்ல....
அட பாவி.... இந்த பொழப்புக்கு நீ கேரளாவுக்கு அடிமாட போயிருக்கலாம் டா...!
ம்ம்ம்ம் கவர்மென்ட் ஆபிஸ்ல கூட இதானா??? உன் கடமை உணர்சிய கண்டு நான் வியக்க.......
மூன்று பக்கமும் தண்ணீர் சூழ்ந்திருந்தும் பருக ஒருவாய் நீரும் கிடைக்காமல் அலைகிறது ஒரு பெருங் கூட்டம் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...