|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 February, 2012

இதே நாள்...


  • இந்திய தேசிய அறிவியல் தினம்
  •  இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
  •  முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
  •  வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
  •  எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)

அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மக்கள் நலப் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.


 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா கடந்த ஜனவரி 23-ம் தேதி தீர்ப்பளித்தார். மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்றும், அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கி, அவர்களுக்கான பணப் பலன்கள் முழுவதையும் வழங்கிட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கத் தலைவர் என். செல்லப்பாண்டியன் தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 மக்கள் நலப் பணியாளர்களின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்குவதில்லை என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது.  எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லப்பாண்டியன் தனது மனுவில் கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

பார்த்ததில் பிடித்தது!

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.... ? கத்தி சொருகி வைக்க...!! 


நாளைக்கு சின்ன பசங்க இதை பார்த்துட்டு கத்தியை சொருக தலையை 


தேடப்போவுதுங்க...!!!


அணுஉலை எதிர்ப்பிற்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்ற நச்சான 


கருத்துக்களை கூறி படமெடுத்து ஆடிய நச்சி பாம்புகளை தலைநகரத்திலேயே 


கூடி தலையில் தட்டி போட்ட அணு உலைக்கு எதிரான மக்கள்கூட்டம்!


நட்பு வலியது....

அது எளிதாய் எல்லோரையும் இணைத்துவிடும்"


மக்கள் விரோத மத்திய அரசே!

கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறுத்து!


Tamil nadu electricity board ROCKZZZZZZ...


ஐநாவை முற்றுகையிட ஐம்பதாயிரம் மக்கள் ஐரோப்பா எங்கும் 


அணிதிரள்கின்றனர் .


Jai-Ho Moment !!!

Indian Hockey Team Qualified for London Olympics 2012 


Nature at it's extreme ..



இதெல்லாம் டூ மச்


பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு தடை விதிக்க போப் ஆண்டவர் வேண்டுகோள்!


ரோம் நாட்டில் உள்ள வாடிகன் நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான 3 நாள் சிறப்புக்கூட்டம் நடந்தது. இதில் போப் ஆண்டவர் ஜான் பெனடிக்ஸ் கலந்து கொண்டு  அப்போது அவர்,   ‘’உலகம் முழுவதும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணமான பிறகு தங்கள் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்று குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் அவர்கள் குழந்தை பெற நினைக்கும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனால் மனம் உடைந்து போகும் அவர்கள் உடலுறவு மூலம் குழந்தை பெற முயற்சி செய்வதில்லை.உடனே அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சிக்கிறார்கள்.

டாக்டர்களும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு மூட்டையை பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தையை உருவாக்குகிறார்கள். சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. செயற்கை கருத்தரிப்பு கடவுளின் படைப்புக்கு விரோதமானது. எனவே அதை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும். குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கை கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக்கூடாது. செயற்கையான முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை ஒழிக்கவேண்டும்’’என்று கூறினார். 

26 February, 2012

இதே நாள்...


  • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
  •  நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
  •  பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
  •  ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
  •  அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி தகுதி!



2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடந்த தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை இந்திய சந்தித்தது. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இத்தொடரில் அவர் 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி முதன்முறையாக தகுதி பெறவில்லை. 

கின்னஸ் புத்தகத்தில் சந்திர பகதூர் டாங்கி


உலகின் மிக குள்ளமான நபராக, நேபாளத்தை சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி,72, என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன்ரி பலாவிங், என்பவர் தான் இதுவரை உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டவர். இவரின் உயரம், 59.9 செ.மீ., மட்டுமே. இந்நிலையில், பலாவிங்கை விட, 5.3 செ.மீ., உயரம் குறைவான அதாவது, 54.6 செ.மீ., உயரம் கொண்ட சந்திர பகதூர், கின்னஸ் நிறுவனத்தால் உலகின் மிக குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். கின்னஸ் உலக பதிவு நிறுவனத்தின் தலைவர் கிரெய்க் க்ளெண்டே தலைமையிலான ஒரு குழு, காத்மாண்டுவிற்கு வந்து சந்திர பகதூரின் உயரத்தை அளந்து உறுதி செய்த பின், இந்த அறிவிப்பை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 கிலோ எடையுள்ள சந்திர பகதூர் பற்றி, நேபாள ஆய்வாளர்கள் சிலர், மூன்று வாரங்களுக்கு முன் வெளியுலகிற்கு தெரிவித்தனர். இதையடுத்து தான், அவரது பெயர் உலகளவில் பிரபலமானது.

உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு !

அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம்

உயிரின் விலை ரூ. 5

ரூ. 5க்காக ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் தள்ளிவிட்டதில் 21 வயது இளைஞர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூரைச் சேர்ந்தவர் சுபம்சிங். அம்மாநில போலீஸ்துறையில் சேர்வதற்காக பரீட்சை எழுதியிருந்தார். அதன் முடிவுகளை காண்பதற்காக நேற்று சத்னாவிற்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊர் திரும்பியுள்ளார். சத்னாவிலிருந்து ராம்பூருக்கு ரூ. 20 வசூலிப்பதற்கு பதிலாக கண்டக்டர் ரூ. 25 கேட்டுள்ளார். கண்டக்டர் கூடுதலாக ரூ. 5 கேட்டதால் சுபம் சிங் ஆத்திரமடைந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக, கண்டக்டர் சுபம்சிங்கை ஓடும் பஸ்சில் இருந்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சுபம்சிங் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் பணக்காரநாடு கத்தார்...

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. 

25 February, 2012

ஒரு பல்கலையின்கீழ் 100 கல்லூரிகள் மட்டுமே இயங்கப் பரிந்துரை!


ஒரு பல்கலையின் கீழ், 100 கல்லூரிகள் மட்டும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என, யு.ஜி.சி -க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான நிபுணர் குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, தியாகராஜன் தலைமையில், 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, 2008 ஆகஸ்ட்டில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைத்தது. இக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து, 80 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை, சமீபத்தில் யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை கொள்கை அளவில், யு.ஜி.சி., ஏற்றுக்கொண்டதுடன், 12வது ஐந்தாண்டு திட்ட செயல்பாடுகளில் சேர்த்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் எடுத்துக்காட்டு எந்த பல்கலையாக இருந்தாலும், ஒரு பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், 100 கல்லூரிகள் மட்டுமே இயங்க வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால்தான், பல்கலையின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள், புதிய பல்கலையை ஆரம்பிக்கும்போது, பல்கலைகள் இல்லாத மாவட்டங்களில் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், குறைந்தது 10 தன்னாட்சிக் கல்லூரிகளை, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நடத்த வேண்டும். இந்த கல்லூரிகளை, தனியார் கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடத்த வேண்டும். இவ்வாறு, பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. முக்கியத்துவம் இல்லை இதுகுறித்து, தியாகராஜன் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில், எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஏற்ப, நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களில், செனட், சிண்டிகேட் உட்பட பல அமைப்புகள் உள்ளன. இதில், தொழில்துறை பிரதிநிதிகளுக்கோ, கல்வியாளர்களுக்கோ, விஞ்ஞானிகளுக்கோ, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இவர்களை கட்டாயம் நியமனம் செய்யவும், சட்ட விதிமுறைகளில் இடம் இல்லை. இவர்கள் குழுவில் இருந்தால்தான், காலத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுவதிலும், வேலை வாய்ப்பு மிக்க புதிய பாடத் திட்டங்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்த முடியும். எனவே, இவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதை, சட்ட ரீதியாக உறுதிசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு, முறையாக பயிற்சி அளிப்பது, இணையதள நிர்வாக முறையை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
அண்ணா பல்கலையின் கீழ் 500 கல்லூரிகள்! தமிழகத்தில், 500 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையின்கீழ் இருந்து வந்த நிலையை மாற்றி, நிர்வாக வசதிக்காக, முந்தைய தி.மு.க., அரசு, நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் புதிய பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தியது. புதிய பல்கலைக்கழகங்களில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும், கல்வித்தரம் சரியாக இல்லை என்றும் கூறி, 500 கல்லூரிகளையும், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையின் கீழே, தற்போதைய அரசு கொண்டு வந்துள்ளது. இது, நிர்வாகச் சுமையை ஏற்படுத்தும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரமா?

மிருகசீரிடம் நட்சத்திரமா! ஆதிசங்கரர் சிரகசன் என்னும் காபாலிகனுக்கு (நரபலி கொடுப்பவன்) நட்சத்திரக் கதை ஒன்றைச் சொன்னார். வேடன் ஒருவன் மானை விரட்டினான். பாய்ந்து சென்ற மானின் கொம்பு, கொடி ஒன்றில் சிக்கியது. வேடன் அதைக் கொல்ல முயன்ற போது கொஞ்சம் பொறு! என் மனைவியிடம் சொல்லி விட்டு வந்து உனக்கு உணவாகிறேன், என்றது. இரக்கம் கொண்ட வேடனும் அனுப்பி வைத்தான். சற்று நேரத்தில் ஆண் மானுடன் பெண் மானும் அதன் இருகுட்டிகளும் அவன் முன் வந்து நின்றன. ஒருவரை விட்டு ஒருவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடு, என்று பெண்மான் வேடனிடம் சொன்னது. மிருகஜாதியிலும் கூட நாணயமும், பாசபந்தமும் இருப்பதை அறிந்த வேடன் மலைத்தான். அவனுள் இரக்கம் ஊற்றெடுத்தது. அம்பும், வில்லும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட சிவன், அம்பிகையோடு எழுந்தருளி வேடனுக்கு மோட்சமளித்தார். மான்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்தார். அவை வானமண்டலத்தில் மிருகசீரிடம் என்னும் நட்சத்திரமாகும் பேறு பெற்றன. இந்நட்சத்திரத் தொகுதியில் நான்கு நட்சத்திரங்கள் உள்ளன. மிருகசீரிட நட்சத்திரத்தினர் தங்களை வாக்குத் தவறாதவர்கள், எக்காரணத்தாலும் உயிருக்கு பயப்படாதவர்கள், பாசத்திற்கு கட்டுப்படுபவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம்.

இதே நாள்...


  • குவைத் தேசிய தினம்
  •  மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
  •  சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  •  தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)

வெறும் 8,000 பேரை தான் கொன்றோம் இலங்கை!

ஒரு இனத்தையே அளித்துவிட்டு வெறும் 8000 நா கூசவேண்டாம் இந்த நாய் அரசாங்கத்துக்கு...  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரின் போது சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தகவலை இலங்கை கூறியுள்ளது. இந்த கணக்கெடுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களைத் தவிர்த்து பொதுமக்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச உரிமைக் குழுவின் ஆய்வறிக்கையில், இலங்கையில் இறுதிப் போரின் போது சுமார் 11,172 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது

போலியோ பாதிப்பு இந்தியா நீக்கம். போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியல்: இந்தியா நீக்கம்

விழிப்புணர்வு காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் எதிரொலியாக நாட்டிலிருந்து போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ பாதிப்புள்ள நாடுகளின்  பட்டியலில்  இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலமே இந்த வெற்றி பெற முடிந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே ...

 அரசியல் கட்சிகளே வெற்றி பெறும், ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே என்று பொதுமக்களைப் பார்த்து எச்சரிக்கை செய்தார் அண்ணா ஹசாரே. சனிக்கிழமை உ.பி.மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பொதுமக்கள் விழிப்பு உணர்வு  பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு பேசினார்.
இந்த உ.பி. தேர்தலுக்குப் பின் எல்லாம் அடியோடு மாறி விடும் என்றெல்லாம் யாரும் கனவு காண முடியாது. எப்படி இருந்தாலும் இதன் முழு வெளிப்பாடு, பொதுமக்கள் தோற்பதும் அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதும்தான். ஜன்லோக்பால் என்பதன்மூலம் இப்போது ஒரு போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தை எட்டியிருக்கிறோம். இது முழுமை அடையுமானால், இந்தப் போக்கில் ஒரு மாறுதல் வரலாம் என்றார் அண்ணா ஹசாரே.

24 February, 2012

வார பலன் (24-2-2012 முதல் 1-3-2012 வரை)

மேஷம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். திறமை பளிச்சிடும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதேசமயம் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். சேமிப்பில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உற்றார், உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்கு செல்லக்கூடும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.

மிதுனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமைப்படக்கூடும். குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடக்கூடும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சில சலுகைகள் பெறக்கூடும்.

கடகம் பொது: முன்னேற்றமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். எதிலும் நிதானமாக செயல்படுவீர்கள். திறமை மேம்படும். உடல் நலனில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய ஆடை மற்றும் மங்கலப் பொருட்கள் பெறக்கூடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் மேம்படும். பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். நண்பர்கள் வீ்ட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு மகிழக்கூடும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகளும் பெறக்கூடும். 

கன்னி பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

துலாம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதயாத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடவும். பேச்சில் நிதானம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

விருச்சிகம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செலவுகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உடல் நலம் மேம்படும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. பெண்களுக்கு: கணவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

மகரம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்களிடம் எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்பம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். பண வரவு சீராக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். யாருடனும் வீண வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனதில் புது தெம்பு பிறக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத் தலைவருக்கு அதிக வருமானம் வரும் வேலை கிடைக்கக்கூடும். எதிலும் நிதானமாக இருக்கவும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

மீனம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். வேலை பளு அதிகரி்ககும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

திருக்கயிலாய யாத்திரை செல்ல நிதியுதவி வழங்க கோரிக்கை!

இந்துக்கள் திருக்கயிலாய யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க வேண்டும், என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நடராஜர் கோவிலை கடந்த ஆட்சியில் அரசு கையகப்படுத்தி உண்டியல் வைத்துள்ளது. இந்து கோவில்களைப் பாதுகாக்க அறவோர் வாரியம் அமைக்க வேண்டும் என, நாங்கள் போராடி வருகிறோம். இந்தக் கோவிலையும் அறவோர் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அதே போன்று இந்துக்கள் தங்கள் புனிதத் தலமான திருக்கயிலாயம், முத்திநாத் பயணம் செல்வதற்கு அரசு 5,000 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும்.இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

எதை இழக்கவே கூடாது?

வாழுகின்ற நாட்களில் எதை எதையோ இழக்கின்றோம். மதிப்புமிக்க பொருட்களை இழக்கின்றோம்; அரிய நட்பை இழக்கின்றோம். ஏன், பந்த பாசங்களைக் கூட இழக்கின்றோம். எந்த ஒன்றை இழந்தாலும் மனம் வேதனைப்படுகிறது. ஆனாலும், காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்கும்போது இழந்த சிலவற்றைத் திரும்பப் பெறுகின்றோம். மனம் குதூகலமாகிறது.  நம்மிடம் இருக்கும் செல்வத்தை இழப்பது, ஒன்றையும் இழப்பதாகாது. நம்முடைய உடல் நலத்தை இழப்பது ஏதோ சிறிதளவு இழந்ததாகக் கொள்ளப்படும். ஆனால், நம்மிடம் இருக்கின்ற நற்குணத்தை இழந்துவிட்டால் எல்லாவற்றையும் இழந்ததற்கு ஒப்பாகும். வாழ்க்கைத் தத்துவத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாது. வாழ்வாதாரத்துக்கே அடிப்படையான செல்வத்தை இழந்தால்கூட ஒன்றுமில்லையாம். தேக நலனில் இழப்பு வந்தால்கூட, ஏதோ சிறிதளவைத்தான் நாம் இழந்ததாகக் கொள்ள வேண்டுமாம். ஆனால், நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ள நற்குணங்களை இழப்பது என்பது எல்லாவற்றையும் இழந்ததற்கு சமமாகும். ஆக, நல்ல குணங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை என்றைக்கும் போற்றுதலுக்குரியது. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் என்றைக்குமே பிறரால் வஞ்சிக்கப்பட மாட்டான்.

இதே நாள்...

  •  மெக்சிகோ கொடி நாள்
  •  தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்(1948)
  •  நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
  •  எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
  •  கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...